Samantha: "காதில் முடி ஏன் வளர்கிறது?" தயாரிப்பாளரை கலாய்த்த நடிகை - ஏன்?

"விவாகரத்துக்கு பிறகு, தன்னிடம் வரும் கதைகளுக்கு எல்லாம் ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் சமந்தா. ஒரு உச்ச நட்சத்திரமாக அவரது கரியர் முடிவை எட்டிவிட்டது. மீண்டும் தனது ஸ்டார்டம் ஐ அவர் அடைய முடியாது" என்றார்
Samantha: "காதில் முடி ஏன் வளர்கிறது?" தயாரிப்பாளரை கலாய்த்த நடிகை - ஏன்?
Samantha: "காதில் முடி ஏன் வளர்கிறது?" தயாரிப்பாளரை கலாய்த்த நடிகை - ஏன்?ட்விட்டர்
Published on

தன் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று விமர்சித்திருந்த தயாரிப்பாளரை பங்கமாய் கலாய்த்திருக்கிறார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நயன்தாரா, த்ரிஷா வரிசையில் இவரும் தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

யூ டர்ன், யஷோதா, சாகுந்தலம் போன்ற படங்களில் சமந்தா நடித்துள்ளார். யூ டர்ன், யஷோதா படங்கள் வெற்றியடைந்த அளவிற்கு சாகுந்தலம் வெற்றியடையவில்லை.

இதனை தொடர்ந்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சிட்டி பாபு நடிகையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

தெலுங்கு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் சிட்டி பாபு கூறியதாவது,

"விவாகரத்துக்கு பிறகு, தன்னிடம் வரும் கதைகளுக்கு எல்லாம் ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் சமந்தா. 'ஊ அன்டாவா' பாடலையே தன் வாழ்வாதாரத்துக்காக தான் அவர் ஒப்புக்கொண்டார்.

ஒரு உச்ச நட்சத்திரமாக அவரது கரியர் முடிவை எட்டிவிட்டது. இனி இதுபோல் தன் வசம் வரும் பாத்திரங்களை மட்டும் அவர் செய்யட்டும். மீண்டும் தனது ஸ்டார்டம் ஐ அவர் அடைய முடியாது" என்றார்

நடிகை சமந்தா தனக்கு அரிய வகை சரும பிரச்னை - மயோசிடிஸ் - இருப்பதாக வெளிப்படையாக பேசியிருந்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டிகள் சிலவற்றில் தான் அனுபவித்து வரும் கஷ்டங்கள் குறித்து பகிர்கையில் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.

அதனை எடுத்துக்காட்டி பேசிய தயாரிப்பாளர், "மீடியா முன் அழுவதால், எமொஷனலாக பேசுவதால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது. கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் படத்தை ரசிப்பார்கள், ஏற்பார்கள்" என்று கூறியிருந்தார் சிட்டி பாபு

Samantha: "காதில் முடி ஏன் வளர்கிறது?" தயாரிப்பாளரை கலாய்த்த நடிகை - ஏன்?
சமந்தா : அரியவகை சரும நோய் பாதிப்பு, சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளாரா நடிகை?

இந்த விமர்சனத்தை தொடர்ந்து நடிகை சமந்தா அதற்கான பதிலடியை கொடுத்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தவர், கூகுளில் தான் தேடிய சந்தேகம் ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட் பதிவிட்டிருந்தார்.

அதில், "மனிதர்களுக்கு காதில் முடி ஏன் வளர்கிறது" என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையாக ஆண்களுக்கு அதிகமாக 'டெஸ்டொஸ்டிரோன் சுரப்பதால்' தான் இவ்வாறு காதுகளில் முடி வளர்கிறது என இருந்தது.

சமந்தாவின் இந்த பதிலடி இணையவாசிகளிடையே கவனம் பெற்று படுவைரலாகி வருகிறது. திரையுலகினர் பலரும் நடிகைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்

Samantha: "காதில் முடி ஏன் வளர்கிறது?" தயாரிப்பாளரை கலாய்த்த நடிகை - ஏன்?
சமந்தா முதல் சல்மான் கான் வரை: சில விஷயங்களை ஓபனாக பேசிய நட்சத்திரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com