உயிரை மாய்த்துக்கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் - குடும்பத்தினர் அதிர்ச்சி
உயிரை மாய்த்துக்கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் - குடும்பத்தினர் அதிர்ச்சிTwitter

உயிரை மாய்த்துக்கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் - குடும்பத்தினர் அதிர்ச்சி

பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Published on

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தனது அறையில் மீரா துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை குடும்பத்தினர் பார்த்து அலறியடித்துள்ளனர்.

பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரை மாய்த்துக்கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் - குடும்பத்தினர் அதிர்ச்சி
"ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கணும்" - சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

logo
Newssense
newssense.vikatan.com