மன அழுத்ததால் பாதிப்படையும் குடல் ஆரோக்கியம் - ஆராய்ச்சிகள் சொல்வதென்ன?

நார் சத்து இல்லாத உணவுகளை பெரும்பாலும் உண்பதை முக்கிய காரணமாக வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.
Depression
Depressioncanva
Published on

நம் உடலில் எல்லா செயல்களையும் கட்டுப்படுத்துவது மூளையே. இதை அனைவரும் அறிந்திருப்போம் . ஆனால், இந்த மூளையில் நடக்கக்கூடிய பல முக்கியமான செயல்களில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குவது நம் குடல்.

நமது குடலுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு இருப்பது அறிவியல் ரீதியாகவே நிரூபணமாகி உள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் , குடலை இரண்டாம் மூளை என்றே கூறுகின்றனர்.

மன அழுத்தம் (depression) , மன பதற்றம் (anxiety) , ஆகிய மன பிரச்னைகளால் பாதிக்கபட்டவர்களின் குடல் நுண்ணுயிரை ஆய்வு செய்த பொது , சாதாரண மனிதர்களை விட நல்ல நுண்ணுயிரிகள் கம்மியாக இருப்பதையும் , உடலுக்கு தேவையில்லாத கேட்ட நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்திருக்கின்றனர்.

செரடோனின்- சந்தோஷத்தின் காரணி:

மூளைக்கும் குடலுக்கும் இருக்கும் தொடர்பு இருவழியானது. நம் குடல் நன்றாக இல்லை என்றால் அது நம் மன ஆரோக்கியத்தை பாதிக்கும், நம் மனம் ஆரோக்கியமாக இல்லை என்றால் அது நம் குடலை பாதிக்கும் . இதனால் தான் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கபோடுவோர் பலருக்கு குடல் அழற்சி நோய் போன்ற செரிமானம் சம்பந்தப்பட்ட நோய்களும் இருக்கும் .

நாம் சந்தோஷமாக உணர்வதற்கு முக்கிய காரணம் செரோடோனின் எனும் நரம்பியக்கடத்தி. இந்த செரோடோனினின் அளவு குறைந்தால் மன அழுத்த நோய் போன்று பல மன நோய்கள் உண்டாகலாம். இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் நம் உடலில் இந்த செரோடோனினை 85% மேல் உற்பத்தி செய்வது நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் தான் . இந்த நுண்ணுயிர்களின் சம நிலை மாறும்போது இந்த செயல்பாடுகள் பாதிக்கப்படும் .

Depression
பெண்கள் ஆரோக்கியம் : மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? சமாளிப்பது எப்படி?

செரடோனின் சம நிலை ஏன் குறைகிறது?

நார் சத்து இல்லாத உணவுகளை பெரும்பாலும் உண்பதை முக்கிய காரணமாக வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். நார்ச்சத்தே நம் உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கு தீணி. நார்சத்து இல்லாத உணவைத்தொடர்ந்து சாப்பிடும்போது உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைந்து தேவையற்ற நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கூடி விடும்.

மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகிய இரண்டும் நல்ல நுண்ணுயிரிகளை அழிக்கும். அடிக்கடி ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துகொள்வோர்களுக்கு இந்த நுண்ணுயிர் சம நிலை பாதிக்க படும். சரியாக தூக்கம் இல்லாதவர்களுக்கு நுண்ணுயிர் சம நிலை பெரிதும் பாதிக்க படும் . இதனாலயே சரியாக தூங்காத பலருக்கு செரிமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

போதுமான உடற்பயிற்சி இல்லாதோருக்கும் நுண்ணுயிர் சமநிலை இருக்காது. முன்பு கூறியது போல் அதிகமான மன கவலை , மன அழுத்தம் ஆகியவை இந்த நுண்ணுயிரிகளை பாதிக்கும்.

நுண்ணுயிர் சம நிலை அடைவது எப்படி?

இந்த நுண்ணுயிரிகளை சம நிலையும் நன்றாகவும் வைத்து கொள்ள தினசரி உடற்பயிற்சி , சத்தான உணவுகள் எடுத்துக்கொள்வது , யோகா , தியானம் ஆகியவற்றை செய்து மன அழுத்தத்தை குறைத்து கொள்வது தேவை.

இந்த நுண்ணுயிரிகளை வலுப்படுத்த சிறந்த எளிய உணவு தயிர், மோர் ஆகியவையே. தயிரை வீட்டிலேயே செய்யும்போது அதில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள் அழியாமல் சிறந்த பலன்களை கொடுக்கும். அதிகமாக செரிமான பிரச்னை , அடிக்கடி வாயில் புண் வருவது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் கேட்டு ப்ரோபயாட்டிக்ஸ் மாத்திரையை எடுத்துக்கொள்வதும் நல்லது.

இவற்றை பின்பற்றினால், நம் உடல் மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்

Depression
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com