மலச்சிக்கலை நீக்கிக் காலை வேளையை எளிதாக்கும் வைத்தியம் - Nalam 360

மூல நோய்க்கு முதல் காரணமும் முக்கியக் காரணமும் மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் இருந்தால் மற்ற நோய்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றோம் என்று அர்த்தம்
Constipation

Constipation

Twitter

Published on

மூல நோய்க்கு முதல் காரணமும் முக்கியக் காரணமும் மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் இருந்தால் மற்ற நோய்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றோம் என்று அர்த்தம். மற்ற உடல் தொந்தரவுகள் விரைவில் வர மலச்சிக்கலே முக்கியக் காரணமாகும். இறுகிய மலம் மென்மையான ஆசன வாயை கிழித்து விடுவதால் புண்களும் வெடிப்பும் ஏற்படுகின்றன. அந்த இடங்களில் மலம் சேர்வதால் கிருமிகள் தொற்றி அந்தப் புண்களும் ஆறாத நோயாக மாறுகின்றன. இதை மூலம், ஆசன வாய் நோய்கள் என வகைப்படுத்துவர். ஆசன வாயில் வருகின்ற எந்தத் தொந்தரவுக்கும் மலச்சிக்கலே காரணம்.

<div class="paragraphs"><p>மலச்சிக்கலும் ஆசன வாயில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கான காரணங்கள்</p></div>

மலச்சிக்கலும் ஆசன வாயில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கான காரணங்கள்

Facebook

மலச்சிக்கலும் ஆசன வாயில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கான காரணங்கள்

மலச்சிக்கல், மலம் இறுகி போதல் - மாவு உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் வருகின்ற தொந்தரவு. இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்ற அனைத்துமே மாவு உணவுகளே. மதியமும் அதிகமான அரிசி சோறு. இரவும் அதே டிபன் வகைகள் கூடுதலாக பரோட்டா, சப்பாத்தி. இவையும் மாவு உணவுகளே. மாவு உணவுகள், மலச்சிக்கலை உருவாக்கும்.

நார்ச்சத்துகள் இல்லாத, அதாவது பழங்கள், காய்கறிகள், கீரைகள் இல்லாத உணவுகளைத் தினசரி சாப்பிடுவதால்.

அதிகமாக மிளகாய் காரம், நிறைய எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பதால்.

நெடுநேரம் உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் கொண்டர்வர்களுக்கு வரும்.

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருப்பவர்களுக்கு வரும்

அதிகமாகக் குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கு மூலம் வரலாம்

மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு ஆஸ்துமா தொந்தரவு இருக்கலாம். சரும பிரச்சனைகளும் இருக்கலாம்.

<div class="paragraphs"><p>Constipation</p></div>
மனிதன் புரூட்டேரியனா ? எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம் ?
<div class="paragraphs"><p>மலச்சிக்கல்</p></div>

மலச்சிக்கல்

Twitter

மலச்சிக்கல், ஆசன வாய் நோய்கள் தீர

மலச்சிக்கல் ஏன் வருகிறது? பசிக்கும்போது சாப்பிடுவதில்லை. பசிக்காத போது நிறையச் சாப்பிடுவது. இதுதான் இயற்கை விதி மீறல். மிகவும் முக்கியமான இயற்கை விதி மீறலை நாம் மீறுவதால் வரக்கூடிய தொந்தரவுதான், மலச்சிக்கல். உடல் கேட்காத போது, நேரத்தைப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கெல்லாம் மலச்சிக்கல் தொந்தரவு இருக்கத்தான் செய்யும். பசிக்கும்போது மட்டும் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்காது.

குளிர்ச்சியான உணவுகளுக்கே முதல் இடம் தரவேண்டும். குளிர்ச்சியான உணவுகளைப் பெரும்பாலும் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக மாற வேண்டும். உணவில் 70% குளிர்ச்சியான உணவுகளே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

முளைக்கீரை, மிளகுத்தக்காளிக் கீரை எனும் மணத்தக்காளிக்கீரை, வெந்தயக்கீரை, துத்திக்கீரை, பண்ணைக்கீரை, பருப்புக்கீரை, பாலக்கீரை, முருங்கை கீரை ஆகியவற்றை தினம் ஒரு கீரை எனச் சாப்பிடும் பழக்கத்தில் ஈடுபடுவது நல்லது.

முள்ளங்கி, பீர்க்கு, புடலை, சுரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, பிடி கருணை, அவரைக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், சௌ சௌ ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும்.

கொய்யா, சப்போட்டா, பப்பாளிப்பழம், மாம்பழம், திராட்சை, கமலா, சாத்துக்குடி, மலை வாழைப்பழம் ஆகியவை மலச்சிக்கல் தொந்தரவை நீக்கும். இவற்றை ஒருவேளை உணவாகச் சாப்பிடுவதே நல்லது.

காலை வேளையை எப்போதும் டிபன் உணவுகளாக இல்லாமல், பழ வகை உணவு வேளையாக மாற்றிக்கொள்ள வேண்டும். பழங்கள், தேங்காய்ப் பால் அல்லது கஞ்சி ஆகியவையே போதுமானது.

இரவு நேரத்தில் ஒரு மேசைக்கரண்டி அளவில் வெந்தயத்தை எடுத்து, அரை டம்ளர் பாலில் கலந்து உரை போட்டு தயிராக்க வேண்டும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தயிரில் ஊறிய வெந்தயத்தை மென்று தயிரோடு சேர்த்து சுவைத்து சாப்பிட வேண்டும். இதுபோல முளைவிட்ட வெந்தயத்தையும் சிறிது தயிரோடு சேர்த்துச் சாப்பிடலாம்.

தோல் சீவிய சோற்றுக்கற்றாழையை 7 முறைக்கும் மேல் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். முட்கள், பசைகளை நீக்கவும். இரண்டு அங்குலம் அளவுள்ள சோற்றுக்கற்றாழையை நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லத்தில் புரட்டி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர வேண்டும். இதனால் மலச்சிக்கல் தீர்வதோடு உதிரமூலமும் விரைவில் குணமாகும்.

உப்பு, புளி அதிகம் சேர்க்காத உணவுகளைச் சாப்பிட வேண்டும். பச்சரிசிக்கு பதிலாகப் புழுங்கல் அரிசியைப் பயன்படுத்தலாம். கைக்குத்தல் அரிசி, மற்ற பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தலாம்.

புளித்துப்போன தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புளித்துப்போன மாவில் தோசை, இட்லி, ஊத்தாப்பம், குழி பணியாரம் செய்து சாப்பிடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

உதிர மூலம் பிரச்சனை இருப்பவர்கள், குப்பைமேனி இலையைக் கெட்டியாக அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து காய்ச்சிய அரை டம்ளர் பசும்பாலில் கலந்து காலை ஒருவேளை மட்டும் 3-5 நாட்கள் வரை சாப்பிட குணமாகும். இந்த மருந்து சாப்பிடும் போது, புழங்கல் அரிசியைக் கஞ்சியாகச் சாப்பிடலாம்.

சின்ன வெங்காயப்பச்சடி, வெள்ளரி கேரட் பச்சடி, காய்கறி சாலட், பழ சாலட் சாப்பிடுவது நல்லது.

புகைப்பழக்கம்,புகையிலை பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். கோழி, மற்ற பறவை இறைச்சிகளையும் தவிர்க்க வேண்டும். மீன்கள் சாப்பிடலாம். பொரித்த, வறுத்த மீன்களைவிடக் குழம்பு மீன்கள் நல்லது.

<div class="paragraphs"><p>மலச்சிக்கலைத் தீர்க்கும் சூரணம்</p></div>

மலச்சிக்கலைத் தீர்க்கும் சூரணம்

Twitter

மலச்சிக்கலைத் தீர்க்கும் சூரணம்

இதை வீட்டிலே செய்து கொள்ளலாம். மிகவும் எளிமையான முறை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மட்டுமே.

மதியம் அரை டீஸ்பூன் உணவுக்கு முன், இரவு உணவுக்கு முன் அரை முதல் முக்கால் டீஸ்பூன் வரை சாப்பிடலாம். மலச்சிக்கலின் நிலையைப் பொறுத்து, இந்த மலச்சிக்கலைத் தீர்க்கும் சூரணத்தைக் குறைத்தோ கூட்டியோ சாப்பிடலாம். முதல் இரண்டு நாள் சாப்பிட, உங்களுக்கு அளவு தெரிந்துவிடும். அதற்கு ஏற்றதுபோல நீங்கள் கூட்டி குறைத்துக்கொள்ளலாம்.

தேவையானவை

சீரகம் - 50 மி.கி

ஓமம் - 50 மி.கி

கடுக்காய் தூள் - 50 மி.கி

தான்றிக்காய் தூள் - 50 மி.கி

அன்னாசிப்பூ - 50 மி.கி

நில ஆவாரை பொடி - 250 மி.கி

இவையெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சீரகம், ஓமம், அன்னாசிப்பூ போன்ற அனைத்தையும் பொடியாக்கி கொள்ளவேண்டும். அனைத்துப் பொடிகளையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். சூரணம் தயார். இதைக் காற்று புகாத டப்பாவில் சேமித்துப் பயன்படுத்தலாம்.

எப்படிப் பயன்படுத்துவது?

வெந்நீரில் தேவையான அளவு சூரணத்தைக் கலந்து மதியம் சாப்பிடவும். அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கலாம். இரவு அதேபோல சாப்பாட்டுக்கு முன், தேவையான அளவு சூரணத்தைக் கலந்து இரவு சாப்பிடவும். அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கலாம்.

இந்த முறையில் சூரணத்தை சாப்பிட்டு வர மறுநாள் காலையில் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் சுகமாக மலம் கழியும். இதில் உள்ள அனைத்தும் மூலிகைப் பொருட்கள் என்பதால் உடலுக்கும் நன்மையைத் தரும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட மலச்சிக்கல் முற்றிலுமாக நீங்குவதோடு சரும நோய்கள் இருந்தாலும் சரியாகும். மூலம் குணமாகும். ஆஸ்துமா நோயும் சரியாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com