காலை உணவுகள் : வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை; சாப்பிட கூடாதவை

பப்பாளியைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்கிற தவறான கருத்து இருக்கிறதோ, அதுபோல இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் அல்சர் வரும் எனக் கருத்துகள் பரவியுள்ளது… உண்மை இல்லை. அல்சர் வரக் காரணம், அதி உணவு… பசிக்காத போது, சாப்பிடுவது என்றால் நம்ப முடிகிறதா.?
Health tips
Health tips Twitter
Published on

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி மக்களுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. வெறும் வயிறு என்பது முன்னாடி நாளில், இரவு உணவு 7 மணிக்குள் முடித்து இருந்தால், லேசான உணவாக உண்டிருந்தால் மட்டுமே அடுத்த நாள் காலையில் வெறும் வயிறு எனச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு வேளை இரவு 7 மணிக்கு மேல் ஹெவியான உணவுகளாகப் பிரியாணி, சிக்கன், பஃபட் மீல்ஸ், கல்யாண சாப்பாடு போன்ற ஹெவி டின்னர் சாப்பிட்டிருந்தால் மறுநாள் காலையில் அதை வெறும் வயிறு எனச் சொல்ல முடியாது.

வெறும் வயிறா, இல்லையா என்பதை முடிவு செய்வது முன்னாள் உண்ட இரவு உணவின் நேரமும் அளவும் எந்த வகை என்பதைப் பொறுத்துதான். இப்போது, 7 மணிக்குள் 2 இட்லி சாப்பிட்ட வயிறாக இருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் காலை 6 மணிக்கு தூங்கி எழுந்தால், அது வெறும் வயிறு எனச் சொல்லலாம். இரவு 9 மணிக்குச் சாப்பிட்டு இருப்பவருக்கு, மறுநாள் காலையில் அவரின் வயிற்றை வெறும் வயிறு என்று சொல்ல முடியாது. வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள் twitter

வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்

வெறும் வயிற்றில் இயற்கை உணவுகள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதாவது சமைக்காத இயற்கை உணவுகளே, வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடிய மிகச் சிறந்த உணவுகள்.

சமைக்காத உணவுகள்

இயற்கையில் விளைந்த பழங்களான, ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மாம்பழம், பலா, அன்னாசி, திராட்சை, நாவல்பழம், விளாம்பழம் போன்ற உலகில் விளைகின்ற அனைத்துப் பழங்களும் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடியவை.

சிலர் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடியை சிட்ரிக் ஆசிட் என்கிறார்கள். ஆம் சிட்ரிக் அமிலம் ஆனால் இது பழ அமிலங்கள். வயிற்றைப் பாதிப்பது இல்லை. இதைச் சாப்பிட்டால் வயிற்றில் புண் வரும் என்ற தவறான கருத்துகளைப் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படிப் பப்பாளியைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்கிற தவறான கருத்து இருக்கிறதோ, அதுபோல இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் அல்சர் வரும் எனக் கருத்துகள் பரவியுள்ளது… உண்மை இல்லை. அல்சர் வரக் காரணம், அதி உணவு… பசிக்காத போது, சாப்பிடுவது. பசிக்காத போது, அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருப்பது. அதிக உணவே அல்சருக்கு காரணம். உணவைத் தின்று தின்று செரிக்க முடியாமல் புண்ணாகி போன வயிறுதான் அல்சர். பழங்களால் ஒரு போதும் நோய்கள் வருவதில்லை. நோய்களைக் குணப்படுத்தவே பழங்கள் இயற்கையால் படைக்கப்பட்டன.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடிTwitter

நட்ஸ், விதைகள்

முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் - தலா 2, கருப்பு உலர்திராட்சை - 20, சூரியகாந்தி விதைகள், ஆளிவிதைகள், பூசணி விதைகள், மெலான் விதைகள், வெள்ளரி விதைகள், கருப்பு எள், சப்ஜா விதைகள், சியா விதைகள் - தலா 1 ஸ்பூன் என ஒவ்வொரு நாளைக்கு ஒரு வகை எனச் சாப்பிடலாம். பழங்களுக்கு இணையான சத்துகளைத் தரவல்லது.

தேங்காய்

தேங்காய், தேங்காய் பால் ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. வயிற்றுப்புண்கள் குணமாக, வயிற்று எரிச்சல் அடங்க மிகவும் உதவும். தேங்காய்ப்பாலில் இனிப்புக்காக ஒரு பேரீச்சை சேர்த்துக் குடித்தால் அதைவிட பெஸ்ட் காலை உணவு வேறு எது.

தேங்காயில் உள்ள நல்ல கொழுப்பு மனித உடலுக்கு மிகவும் அவசியம். இளநீர் வாய்ப்பு உள்ளவர்கள் குடிக்கலாம். வயிற்றில் எந்த புண்களும் உருவாகாது. இயற்கை உணவால் என்றும் நோய்கள் வராது. இயற்கை உணவால் நோய் சரியாகும். அதுதான் இந்த பிரபஞ்ச உண்மை.

தேங்காய்
தேங்காய்Twitter

காய்கறிகள்

வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற சாலட்களும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். மேற்சொன்ன மூன்றில் அடுத்த இடத்தில் காய்கறிகள் உள்ளன.

முளைக்கட்டிய தானியங்கள்

முளைக்கட்டிய பச்சைப்பயறு, முளைக்கட்டிய வெந்தயம், முளைக்கட்டிய அனைத்து பயறு வகைகளும் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றவை.

அவல்

அவலை சமைக்கத் தேவையில்லை. ஊறவைத்துப் பழங்கள், வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்துச் சாப்பிட்டாலே காலை உணவு ஆரோக்கியமானதாகிவிடும். அவல் தற்போது சிவப்பரசி அவல், தூயமல்லி அவல், கவுணி அரிசி அவல், சிறுதானிய அவல் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. வாங்கிப் பயன்படுத்தலாம்.

அவல்
அவல்Twitter

கற்றாழை ஜூஸ்

கற்றாழை செடியில் உள்ள மடலைக் கட் செய்து, முட்கள் நீக்கி, தோல் சீவி, அதில் உள்ள சதைப்பகுதியை நன்றாகக் கழுவி பனங்கற்கண்டு, கருப்பட்டி சேர்த்து அரைத்துக் குடிக்க வயிற்றுக்கு நல்லது. அதுவும் பெண்களின் மாதவிடாய் தொல்லைகள் காணாமல் போய்விடும்.

நெல்லி ஜூஸ்

இரண்டு நெல்லிக்காய், ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

Health tips
சைலேந்திர பாபு : பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட தமிழ்நாடு டிஜிபி - நெகிழ்ச்சி சம்பவம்

சமைத்த உணவுகள்

நீராகாரம்

முன்னாள் வடித்த சாதத்தில் நீர் ஊற்றி ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை சின்ன வெங்காயம், ஒரு மிளகாய் வைத்துச் சாப்பிடுவது வழக்கம். இதுவும் நல்ல உணவு. நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி, உடலுக்குத் தெம்பு உற்சாகத்தைக் கொடுக்கும்.

கூழ், களி

கேப்பைகூழ், கம்பங்கூழ், களி போன்றவை வெறும் வயிற்றில் காலை உணவாகச் சாப்பிடலாம். அன்றைய நாளுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும்.

கூழ், களி
கூழ், களிTwitter

கஞ்சி

அரிசி கஞ்சி, நொய் கஞ்சி, கேழ்வரகு கஞ்சி, உளுந்து கஞ்சி, வெந்தயக்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, சத்து மாவு கஞ்சி ஆகியவை காலை உணவாகச் சாப்பிடலாம். இவை உடலுக்கு நல்லது. வயிற்றுக்கும் எந்த பாதிப்பும் தராது.

இடியாப்பம்

வெறும் அரிசி மாவால் செய்யப்பட்டு, ஆவியில் வேக வைக்கப்படுவதால் காலை உணவாகச் சாப்பிடலாம். இந்த இடியாப்பம் மாவு புளிக்க வைக்கப்படுவதில்லை. ஆதலால், உடலுக்கு ஏற்ற உணவு.

Health tips
Krithi Shetty's gorgeous Photoshoot| Visual story

சாப்பிடகூடாத காலை உணவுகள்

காபி, டீ, மில்க் ஷேக், அனைத்து பால் பொருட்கள் - இவை உடலுக்குக் கெடுதி. வயிற்றில் சென்று புளிக்கும். வயிற்றில் கழிவுகளாகத் தேங்கும். அன்றைய நாள் ஆரம்பத்திலே வயிற்றைக் கெடுத்துவிடும். அடுத்தடுத்து, வயிற்றில் செல்லும் உணவையும் சேர்த்து கெடுக்கும்.

இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தப்பம், வடை, வடகறி போன்ற பருப்பும் மாவுப்பொருளும் சேர்ந்த டிபன் வகைகள் வயிற்றைக் கெடுப்பதில் இரண்டாம் ரகம்.

ஏற்கெனவே புளித்து 8 மணி நேர மாவு, அதில் டிபன் இன்னும் வயிற்றில் சென்று புளிக்கும். வாயு உருவாகும். கை, கால், மூட்டு வலி, தோள்ப்பட்டை வலி, முதுகு வலி போன்ற வலிக்குக் காரணமாக இருப்பது இந்தக் காலை உணவுகளும் பால் உணவுகளும் தான். வாயு சேர்ந்து, மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, வயிறு அப்செட் எனப் பெரிய நோய் வகைகளை இழுப்பது இம்மாதிரியான பால் வகையும் டிபன் வகைகளும்தான்.

சப்பாத்தி, பூரி, பரோட்டா கோதுமை மற்றும் மைதா கலந்து செய்யப்படுகின்றன. இவற்றில் குளுட்டன் எனும் பசை இருப்பதால் வயிற்றில் அலர்ஜி ஏற்படும். நாளடைவில் வயிறு தொந்தரவுகளைத் தரும். செரிமானக் கோளாறு, எதுக்களித்தல், வயிற்று எரிச்சல், மலச்சிக்கல் எனப் பிரச்சனைகள் தொடரும்.

பரோட்டா
பரோட்டாtwitter

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com