மது போதையில் அட்டூழியம் செய்த பயணிகள்; கைது செய்த மும்பை காவல் துறை - என்ன நடந்தது?

மது அருந்தி சக பயணிகளிடமும் விமானக்குழுவினரிடமும் தகராறு செய்ததாக இருவர் மீது புகார் அளித்தது இண்டிகோ நிறிவனம். புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமையன்று இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மது போதையில் அட்டூழியம் செய்த பயணிகள்; கைது செய்த மும்பை காவல் துறை - என்ன நடந்தது?
மது போதையில் அட்டூழியம் செய்த பயணிகள்; கைது செய்த மும்பை காவல் துறை - என்ன நடந்தது?twitter
Published on

துபாயிலிருந்து மும்பை சென்ற இண்டிகோ விமனத்தில், மது அருந்திவிட்டு சக பயணிகளிடமும், விமானக்குழுவினரிடமும் தகராறு செய்த இரண்டு பயணிகளை கைது செய்துள்ளது காவல்துறை.

சமீப காலமாகவே விமானத்தில் தகாத முறையில் பயணிகள் நடந்துகொள்வதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றன. போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தது முதல், விமானத்தில் அவசர கதவை திறந்தது வரை சர்ச்சைகள் ஏராளம்.

மீண்டும், ஒரு சர்ச்சையாக மது அருந்தி சக பயணிகளிடமும் விமானக் குழுவினரிடமும் தகராறு செய்ததாக இருவர் மீது புகார் அளித்தது இண்டிகோ நிறிவனம். புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமையன்று இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தத்தாத்திரேயா பபார்தெகர் & ஜான் ஜார்ஜ் டிசோசா ஆகிய இருவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே மது அருந்தி இருந்ததாகவும், விமானத்தில் ஏறிய பிறகும் தொடர்ந்து விமான உதவியாளர்களிடம் மதுபானங்களை கேட்டு அதிக அளவில் உட்கொண்டதாகவும் மும்பை காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் துபாயில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் மகிழ்ச்சியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மது போதையில் அட்டூழியம் செய்த பயணிகள்; கைது செய்த மும்பை காவல் துறை - என்ன நடந்தது?
மீண்டும் மீண்டுமா? நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி - என்ன நடந்தது?

அந்த இரு பயணிகளும் விமான சேவை உதவியாளர்கள் மற்றும் சக பயணிகளை மோசமான வார்த்தைகளை கொண்டு திட்டியதாகவும், இண்டிகோ ஏர்லைன்ஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.

எனவே, ஏர்லைன்ஸ் தரப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்த இரு பயணிகளையும் சி ஐ எஸ் எஃப் எனப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளது.

டிசிபி தீக்ஷித் கெதம் கூறியதாவது, ”குடித்துவிட்டு விமான சேவை உதவியாளர்களோடு தவறாக நடந்து கொண்ட அந்த இரு பயணிகளின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 336 பிரிவின் கீழும், விமான விதிமுறைகள் சட்டப்பிரிவு 21, 22 மற்றும் 25இன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

இருவரும் முறையாக கைது செய்யப்பட்டனர், ஆனால் மேற்கூறிய சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஜாமீன் கிடைக்கக்கூடிய பிரிவுகளே என்பதால், அவர்களுக்கு காவல் நிலையத்திலேயே ஜாமீன் கிடைத்து விட்டது. மேற்கொண்டு விசாரணையை தொடர்ந்து நடத்திக் வருகிறோம்.” என்று அவர் கூறினார்.

மது போதையில் அட்டூழியம் செய்த பயணிகள்; கைது செய்த மும்பை காவல் துறை - என்ன நடந்தது?
Air India: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி; அலட்சியம் காட்டிய விமான ஊழியர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com