மீண்டும் மீண்டுமா? நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி - என்ன நடந்தது?

விமானம் மும்பை விமான நிலையம் அருகே வந்த போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்திருக்கிறார்.
indigo
indigoTwitter

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது.

விமானம் மும்பை விமான நிலையம் அருகே வந்த போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்திருக்கிறார்.

அந்த அவசரகால கதவு கவர் கொண்டு மூடப்பட்டிருக்கிறது. ஆனபோதிலும் அந்த கவரை விலக்கி கதவை அந்த பயணி திறக்க முயற்சி செய்திருக்கிறார்.

Indigo airlines
Indigo airlinesTwitter

இதனை பார்த்த விமான ஊழியர்கள் உடனடியாக கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

அவரின் செயலை உடனடியாக ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரையிறங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

indigo
2023ல் இருந்து 2022க்கு டைம் டிராவல் செய்த விமானம்: ஆச்சரியத்தில் இணையம் - எப்படி?
தேஜஸ்வி சூர்யா
தேஜஸ்வி சூர்யா

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜக நிர்வாகி தேஜஸ்வி சூர்யா திறந்தார்.

இது போன்ற நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆபத்தை உணராமல் இப்படி பயணிகள் நடந்துக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே விமான இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

indigo
ஹீலியஸ் விமானம்: நடுவானில் மயக்கமடைந்த 121 பயணிகள் - நடந்தது என்ன? திக் திக் நிமிடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com