சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள் கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்

81 சதவீத பெண்கள் தங்களுக்கு திருமணமாகாமல் இருப்பது, தனியாக இருப்பது தான் நிம்மதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஒருவேளை யாரையாவது காதலிக்கிறார்கள் என்றாலும், தங்களது தனிப்பட்ட விருப்பங்களை அவர்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள்  கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்
சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள் கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்Canva
Published on

இந்தியாவில் 81 சதவீத பெண்கள், தனியாகவும், திருமணமாகாமலும் வாழ்வதை எளிதாக நினைப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

Bumble என்ற டேட்டிங் செயலி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையை செய்தியாக வெளியிட்டுள்ளது வியான் நியூஸ் செய்தி தளம்

அதன்படி,

இந்த செயலியை பயன்படுத்தும் இந்திய பெண்களை வைத்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 5ல் 2 பேருக்கு, திருமண சீசனின் போது, தங்கள் குடும்பத்தினர் கல்யாணம் செய்துகொள்ள அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்

திருமணம், திருமணம் பற்றிய கேள்விகள் தங்களுக்கு அழுத்தத்தை தருகிறது என்று 39 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துகொள்ளவும், ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்புக்குள் போக அவர்கள் வற்புறுத்தப்படுவதாக 33 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

மேலும், சிங்கிளாக இருக்கும் பெண்கள் "சிங்கிள் ஷேமிங்" செய்யப்படுவதாகவும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, திருமணமாகாமல், தனியாக பெண்கள் வெகுகாலம் இருக்க முடியாது எனவும், அப்படி சிங்கிளாக இருக்கும் பெண்களுக்கு விரைவில் ஒரு துணை தேடப்படவேண்டும் என்பது தான் இந்த "சிங்கிள் ஷேமிங்".

திருமணமாகாத பெண்களுக்கு தனிப்பட்ட அடையாளம் என்பது கூட இருப்பதில்லை, இல்ல விழாக்களுக்கு, திருமணங்களுக்கு சென்றால், அவர்களது கல்யாணம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும் என்ற அச்சம் பெண்களுக்கு இருப்பதும் இந்த சிங்கிள் ஷேமிங்கில் அடங்கும் எனக் கூறுகிறது அறிக்கைகள்

சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள்  கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்
”மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார்” - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

காதலித்து வரும் பெண்களுக்கு கூட திருமண அழுத்தம் இருப்பதாக இந்த ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த டேட்டிங் செயலி மேற்கொண்ட ஆய்வில், 81 சதவீத பெண்கள் தங்களுக்கு திருமணமாகாமல் இருப்பது, தனியாக இருப்பது தான் நிம்மதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்

ஒருவேளை யாரையாவது காதலிக்கிறார்கள் என்றாலும், தங்களது தனிப்பட்ட விருப்பங்களை அவர்கள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 83 சதவீத பெண்கள், தங்களுக்கான சரியான துணைக்காக காத்திருக்கின்றனர்

அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கான நேரத்தையும் இடத்தையும் அளித்து, அவர்களின் சிந்தனைக்கும், திறனுக்கும் மதிப்பளிக்கும் ஒரு துணையை அவர்கள் சந்திக்கும்வரை காத்திருக்க தயாராக இருப்பதாகவும் இந்த பெண்கள் கூறியுள்ளனர்.

என்னதான் காலம் மாறிவிட்டது என்று நாம் குறிப்பிட்டாலும், பெண்களுக்கு திருமணம் சார்ந்த அழுத்தம் இருக்கத் தான் செய்கிறது என்று இந்த தரவுகள் கூறுகின்றன. ஒரு சிலருக்கு வீட்டாரின் மூலமாக, ஒரு சிலருக்கோ சுற்றி இருக்கும் சமூகத்தின் வாயிலாக!

சிங்கிளாக இருப்பதே மேல்! திருமணம் பற்றி இளம் பெண்கள்  கருத்து என்ன? ஆய்வில் புதிய தகவல்
மனைவி வீட்டில் இல்லாதபோது... கணவன் செய்யும் 5 விஷயங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com