சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு: ஆனந்த் மகிந்திரா கூறியது என்ன?

ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு செய்தியின் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திராTwitter

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் நேற்று உயிரிழந்துள்ளார்.சைரஸ் மிஸ்திரியின் உயிரிழப்புக்கு பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர் உயிரிழக்க காரணமாக இருந்த கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா சாலை விபத்து குறித்து பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மகிந்திரா படித்த பள்ளி இதுதானா?
 Cyrus Mistry
Cyrus MistryTwitter

"காரின் பின் இருக்கையில் அமர்ந்தாலும், எப்போதும் சீட் பெல்ட்டை அணிவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். மேலும் அந்த உறுதிமொழியை உங்கள் அனைவரையும் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாம் அனைவரும் நமது குடும்பங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்" என்று மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.

சைரஸ் மிஸ்திரி காரின் பின் இருக்கையில் இருந்ததாகவும், அப்போது சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்டும் இந்த செய்தியின் மீது கவனம் செலுத்தியுள்ளது.

ஆனந்த் மஹிந்திரா
சைரஸ் மிஸ்திரி : யார் இவர்? டாடா குழுமத்துக்கும் இவருக்குமான உறவு என்ன? - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com