Rishi Sunak: "இந்தியர்கள் திறனற்றவர்கள்" சொன்ன முன்னாள் பிரதமர்- ஆனந்த் மஹிந்திரா பதில்

இந்நிலையில் போட்டியில் இருந்தவர்கள் விலக, கடைசியில் ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என அறிவிக்கப்பட்டார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தற்போது இருக்கிறார்
Rishi Sunak
Rishi SunakTwitter

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கை வாழ்த்தி ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது

இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்கவுள்ள நிலையில் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் இவர் பிரட்டனின் முன்னாள் பிரதமரான வின்சென்ட் சர்ச்சில் இந்தியர்கள் குறித்து சொன்னதை நினைவுக்கூர்ந்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

<div class="paragraphs"><p>Rishi with Boris Jhonson</p></div>

Rishi with Boris Jhonson

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகலுக்கு பிறகு அடுத்த பிரதமர் யாரென கேள்விகள் எழுந்தது. அவருக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் செய்த சில மாற்றங்களினால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பலரும் லிஸ்ஸுக்கு எதிராக குரல் கொடுக்க, அவர் தன் பதவியை விட்டு விலகினார். வெறும் 45 நாட்களிலேயே இவரது பதவிக்காலம் முடிந்தது. மேலும் இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.

இவருக்கு பிறகு பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் மற்றும் சிலரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் போட்டியில் இருந்தவர்கள் விலக, கடைசியில் ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என அறிவிக்கப்பட்டார். இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தற்போது இருக்கிறார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டனின் பிரதமர் ஆவது இதுவே முதல் முறை. இணையத்தில் ரிஷி சுனக்கிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முன்னாள் பிரிட்டன் பிரதமரான வின்சென்ட் சர்ச்சில் இந்தியர்கள் குறித்து கூறியதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

Rishi Sunak
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

"1947ல் இந்தியா சுதந்திரம் அடையவிருந்த நேரத்தில், வின்சென்ட் சர்ச்சில் 'அனைத்து இந்திய தலைவர்களும் திறன் குறைந்தவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருப்பார்கள்' என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தியா இன்று தனது 75வது சுதந்திர வருடத்தில் திழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், பிரிட்டனின் பிரதமராக கோலோச்சியிருக்கிறார். வாழ்க்கை அழகானது" என்று பதிவிட்டிருந்தார் ஆனந்த் மஹிந்திரா

இதை பகிர்ந்ததிலிருந்து பலரும் ஆனந்த் மஹிந்திராவின் கூற்றுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு நிறைய லைக்குகளையும் பல ஆயிரம் ரீட்வீட்களை பெற்று வருகிறது.

Rishi Sunak
பொன்னியின் செல்வன்: "சோழர் வரலாற்றை தெரிந்துகொள்ள தவறிவிட்டேன்" ஆனந்த் மஹிந்திரா வருத்தம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com