Bastar Dussera: சத்தீஸ்கரில் கொண்டாடப்படும் ’75 நாள்’ நவராத்திரி திருவிழா பற்றி தெரியுமா?

இந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் முக்கிய கடவுளான தந்தேஸ்வரி தேவி தங்களையும், தங்கள் நிலத்தினையும் காப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் தசரா சமயத்தில் கடவுளுக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர்
Bastar Dussera: சத்தீஸ்கரில் கொண்டாடப்படும் ’75 நாள்’ நவராத்திரி திருவிழா பற்றி தெரியுமா?
Bastar Dussera: சத்தீஸ்கரில் கொண்டாடப்படும் ’75 நாள்’ நவராத்திரி திருவிழா பற்றி தெரியுமா?twitter
Published on

நவராத்திரி பண்டிகை தொடங்கிவிட்டது. இந்தியா முழுவதிலும், வீடுகள், கோவில்களில் கொலு வைக்கப்பட்டு, வழிபாடுகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளன.

இந்த நவராத்திரி பண்டிகை ஒரு சில இடங்களில் தசரா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் சில வேறுபாடுகளுடன் நடக்கிறது.

அப்படி பஸ்தர் என்கிற இடத்தில் கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழாவும் கொஞ்சம் வித்தியாமாக இருக்கிறது. இங்கு இந்த 10 நாள் விழா 75 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்திருக்கிறது பஸ்தர் என்ற இடம். இங்கு கொண்டாடப்படும் தசரா திருவிழா, இந்தியாவிலேயே, ஏன் உலகளவில் மிக நீண்ட திருவிழாவாக உள்ளது.

இந்து மாதமான அஷ்வினியில் வரும் அமாவாசையில் தொடங்கி, விஜயதசமி தினத்தன்று முடிவடைகிறது திருவிழா.

பஸ்தர் அரச குடும்பத்தின் குல தெய்வமாக விளங்கியது தந்தேஸ்வரி தேவி அம்மன். தசரா சமயத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன.

இந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் முக்கிய கடவுளான தந்தேஸ்வரி தேவி தங்களையும், தங்கள் நிலத்தினையும் காப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் தசரா சமயத்தில் கடவுளுக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர்

Bastar Dussera: சத்தீஸ்கரில் கொண்டாடப்படும் ’75 நாள்’ நவராத்திரி திருவிழா பற்றி தெரியுமா?
ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?

தசரா சமயத்தில் நடக்கும் மிக முக்கியமான சடங்கு என்றால் அது, ராவணனின் சிலையை எரிப்பது தான். ஆனால், பஸ்தர் பகுதியில், அதற்கு பதிலாக விலங்குகள் பலி கொடுக்கப்படுகின்றன. உள்ளூர் தெய்வங்கள் இந்த காணிக்கையை கேட்பதாக மக்கள் நம்புகின்றனர்.

பாரம்பரிய வாத்தியங்களின் இசை முழங்க, பாரம்பரிய உடை அணிந்து, நடனமாடி கடவுள் ஊர்வலம் ஒன்று நடைபெறுகிறது.

இந்த பஸ்தர் தசராவின்போது பாட் ஜட்ரா என்ற சடங்கு ஒன்று நடக்கிறது. காடுகளில் வெட்டப்படும் முதல் மரக்கட்டையை எடுத்து வந்து, உள்ளூர் தெய்வங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் தேர்கள் செய்வது தான் பாட் ஜட்ரா.

உள்ளூர் கலைஞர்கள், கைவினை பொருட்களை செய்வது, ஊரில் உள்ள வீடுகளில் ஓவியங்கள் வரைந்து அலங்கரிப்பது என, 75 நாட்களும் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கின்றன.

வாய்ப்பு கிடைத்தால், சத்தீஸ்கருக்கு சென்று திருவிழாவை கண்டு களித்து வாருங்கள்

Bastar Dussera: சத்தீஸ்கரில் கொண்டாடப்படும் ’75 நாள்’ நவராத்திரி திருவிழா பற்றி தெரியுமா?
Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com