பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்!

இது பீகாரின் முதல் பால விபத்தல்ல. ஓர் ஆண்டுகாலத்துக்குள் சுமார் 7 முறை பாலம் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன.
பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில்  இடிந்து விழுந்த 7 பாலங்கள்!
பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்!Twitter

பீகாரில் இன்னும் கட்டிமுடிக்கப்படாத பாலம் ஒன்று உடைந்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பகல்பூரில் கங்கை நதிக்கு மேலே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அகுவாணி சுல்தான்கஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாலமானது கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இடிந்து விழுந்தது. நான்கு வழி பாலமான இதன் பொருட்செலவு சுமார் ரூ.1,716 கோடி.

இதுவரை பாலம் இடிந்து விழுந்ததில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்தததையடுத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

டைம்ஸ் நவ் தளத்தின் அறிக்கையின்படி, இது பீகாரின் முதல் பால விபத்தல்ல. ஓர் ஆண்டுகாலத்துக்குள் சுமார் 7 முறை பாலம் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளன.

கடந்த மே மாதம் தொடங்கி, இந்த மே மாதம் வரை இந்த சம்பவங்கள் நடந்துள்ளது சற்றே சர்ச்சையை கிளப்பியுள்ளது

மே 20, 2022

மழையின் காரணமாக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்த 136 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது பாட்னாவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃபதுஹா என்ற இடத்தில் அமைந்திருந்தது

ஜூன்9, 2022

பீகாரின் சஹஸ்ரா மாவட்டத்தில் கண்டுமெர் கிராமத்தில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து விழுந்தது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்

நவம்பர் 18, 2022

நாலந்தா மாவட்டத்தில் கட்டுமான பணியின் போது பாலம் ஒன்று இடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்

பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில்  இடிந்து விழுந்த 7 பாலங்கள்!
குஜராத்: புனரமைத்து 4 நாட்களில் தொங்கு பாலம் இடிந்து விபத்து- அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஜனவரி 16, 2023

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ள இரும்பு பாலமானது, அதிக எடையுடன் கூடிய லாரி ஒன்று அதன் வழியே கடந்து சென்றதில் கணம் தாங்காமல் இடிந்து விழுந்தது. சபோஹர் காட் என்கிற இடத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

பிப்ரவரி 19, 2023

பீகாரின் பட்னா மாவட்டத்தில் பிதா- சமேரா நான்கு வழிச்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

மார்ச் 19,2023

பீகாரின் சரண் மாவட்டத்தில் அமைந்திருந்த பிரிட்டிஷ் கால பாலம் இடிந்து விழுந்த நாள். இதில் இருவர் காயமடைந்தனர்

மே 16, 2023

பீகாரின் புர்னியா மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த பாலம் கான்கிரீட் அமைக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே நிலைக்குலைந்து விழுந்தது.

பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில்  இடிந்து விழுந்த 7 பாலங்கள்!
குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: இந்தியாவில் நடந்த 6 பயங்கர பால விபத்துகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com