பட்ஜெட் 2022 இதுவரை: அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி, 'ஒரே நாடு; ஒரே பதிவு முறை'

நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் தாக்கல் 

பட்ஜெட் தாக்கல் 

Facebook 

Published on

``2022-2023-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும். ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள இந்த கரன்சி வர்த்தகத்துக்கான, புதிய விதிமுறைகளும் உருவாக்கப்படும்." - நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத் துறைக்கு தேவையான 68% தேவையான தளவாடப் பொருட்கள் உள்நாட்டிலேயே வாங்கப்படும். பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் 25 சதவீதம் தொழில்துறை, ஸ்டார்ப் அப் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஒதுக்க வழிவகை செய்யப்படும்.


நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் பேமென்டுகள் தாமதமாகாமல் இருக்க முழுக்க முழுக்க ஆன்லைன் பில் சிஸ்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

<div class="paragraphs"><p>பட்ஜெட் தாக்கல்&nbsp;</p></div>
பட்ஜெட் 2022-23 : லைவ்வாக மொபைலில் பார்ப்பது எப்படி?
<div class="paragraphs"><p>Budjet 2022</p></div>

Budjet 2022

Facebook

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்கிற மூன்று திட்டங்கள் அறிமுகம்.


வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு. சூரிய மின்சக்தி திட்டங்களுக்காக ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி கிடைக்கும் படி செய்யப்படும். 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்க வழிவகை செய்யப்படும்.


2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் முடிக்கப்படும்.


அரசின் மூலதனச் செலவுகளுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டை விட 35.4% அதிகமாகும்.

<div class="paragraphs"><p>பட்ஜெட் தாக்கல்&nbsp;</p></div>
யூனியன் பட்ஜெட் 2022 : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இவைதான்
<div class="paragraphs"><p>கிராமங்களுக்கு இணையம்</p></div>

கிராமங்களுக்கு இணையம்

News Sense

மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் பிரத்யேக மையங்கள் நாடெங்கிலும் துவங்கப்படும்.


நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பதிவு முறை' என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.


நடப்பு ஆண்டிலேயே 5ஜி அலைகற்றைகள் ஏலம் விடப்படும்.


கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளை மேம்படுத்த, இந்த துறைகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பானதாக மாற்ற சிறப்பு பேனல்கள் அமைக்கப்படும்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com