Chail Palace: இமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு அரண்மனையா! ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

முந்தைய அரச இல்லம் தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக உள்ளது. அரண்மனையின் கட்டிடக்கலை, நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் பரந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
Chail Palace: இமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு அரண்மனையா! ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?
Chail Palace: இமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு அரண்மனையா! ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?Twitter

இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ளது சைல் என்ற எழில் கொஞ்சும் கிராமம்.

இந்த கிராமம் அளவு சிறியதாக இருந்தாலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் மிகவும் விரும்பப்படும் ஆஃப்பீட் இடங்களில் இதுவும் ஒன்றாகும். நகரங்களின் சலசலப்பில் இருந்து விலகிச் செல்ல விரும்புபவர்களுக்கு, சைல் ஒரு சிறந்த இடமாகும்.

இந்த கிராமத்தில் பிரமிக்க வைக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று சைல் பேலஸ் ஆகும்.

சைல் அரண்மனை இப்பகுதியின் அரச வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. இந்த அரண்மனை மகாராஜா பூபேந்தர் சிங்கின் அரச இல்லமாக இருந்தது.

இந்த இடத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

மகாராஜா பூபேந்தர் சிங் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிம்லாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் நாடுகடத்தப்பட்ட பிறகு, அவர் சைலுக்கு மாறினார், பின்னர் கிராமத்தை நிறுவினார்.

முந்தைய அரச இல்லம் தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக உள்ளது. சைல் பேலஸ் ஒரு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. விருந்தினர்கள் நவீன வசதிகளை அனுபவிக்கும் அரண்மனையாக இது உள்ளது. அரண்மனையின் ஒவ்வொரு அறையும் கடந்த காலத்தின் மகத்துவத்தை பிரதிபலிக்கிறது.

சைல் பேலஸில் உள்ள அனைத்து அறைகளும் அரண்மனையின் வரலாற்றின் சாரத்தை தக்கவைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Chail Palace: இமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு அரண்மனையா! ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?
Gujarat: படிக்கிணறு முதல் கண்ணாடி அரண்மனை வரை- 5 கண்கவர் Travel Destinations!

சைல் ஒரு கோடைகால ஓய்வு இடமாக இருந்தது. இந்த அரண்மனை பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை சுற்றியுள்ள மலைகள் உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.

சைல் அரண்மனை இந்திய கைவினைத்திறனின் தொடுதலுடன் காலனித்துவ கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெளிப்புறமே மிகவும் அழகாக இருந்தால், உட்புறம் எப்படி இருக்கும் என்று ஆர்வத்தை தூண்டும். ஒரு ஆடம்பரமான பாரம்பரிய ஹோட்டல் என்பதை தாண்டி, சைல் பேலஸ் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது.

அரண்மனையின் கட்டிடக்கலை, நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் பரந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

சைல் கிராமம் பற்றிப் பேசும்போது, சைல் கிரிக்கெட் மைதானத்தையும் சேர்க்காமல் இருக்க முடியாது. 1893 ஆம் ஆண்டு 2,444 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இது உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானமாக அறியப்படுகிறது.

சைல் பேலஸ் மஹாராஜாக்களுக்கான கோடைகால ஓய்வு விடுதியாக இருந்து இப்போது ஹெரிடேஜ் ஹோட்டலாக மாறியிருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

Chail Palace: இமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு அரண்மனையா! ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?
மிதக்கும் கப்பல் போல் கட்டப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை - இந்தியாவில் எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com