தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?

புவி வெப்பமயமாதலால் பாலைவனங்களின் பரப்பு விருந்து வருகிறது. இன்னும் வெப்பமிகுந்ததாக பாலைவனங்கள் மாறிவரும் சூழலில் தார் பாலைவனம் மட்டும் அடுத்த நூற்றாண்டில் பசுமையாக மாறிவிடும் சூழல் நிலவுகிறது. இது எப்படி சாத்தியம்?
தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?
தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?Twitter

இந்தியாவில் இருக்கும் 200 பாலைவனங்களில் மிகப் பெரியது தார் பாலைவனம். 2,38,254 சதுர கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்திருந்திருக்கிறது. இந்த பாலைவனம் பசுமையாக மாறப்போகிறது என்கிறது புதிய ஆய்வுகள்.

உலகெங்கும் வெப்பநிலை அதிகரித்துவருகிறது. கடந்த ஜூன் மாதம் தான் அதிக வெப்பமான மாதம் என தரவுகள் தெரிவிக்கின்றன.

புவி வெப்பமயமாதலால் பாலைவனங்களின் பரப்பு விரிந்து வருகிறது. இன்னும் வெப்பமிகுந்ததாக பாலைவனங்கள் மாறிவரும் சூழலில் தார் பாலைவனம் மட்டும் அடுத்த நூற்றாண்டில் பசுமையாக மாறிவிடும் சூழல் நிலவுகிறது.



2050ல் சஹாரா பாலைவனம் ஆண்டுதோறும் 6000 சதுர கிலோமீட்டர் விரிவடையும் என ஆய்வுகள் கூறுகின்றன. புவி வெப்பமயமாதலால் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கிட்டத்தட்ட எல்லா பாலைவனங்களுக்கும் இதே நிலைதான் என்றாலும் எர்த்ஸ் ஃபியூச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வு தார் பாலைவனம் அடுத்த 100 வருடத்தில் பசுமையாக மாறும் எனக் கூறியுள்ளது.

தார் பாலைவனம் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் பரவியுள்ளது. 1901 முதல் 2015 ஆண்டுகளுக்கு இடையில் தார் பாலைவனத்தில் சராசரி மழைப்பொழிவு 10-50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.

மிதமான பசுமை இல்ல வாயுக்கள் நிலவும் சூழலில், இந்த மழைப்பொழிவு 50 - 200 விழுக்காடாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?
செளதி அரேபியா: பாலைவனத்தில் உருவாக்கப்படும் ஒரு பசுமை நகரம் - என்ன நடக்கிறது அங்கே ?



வரலாற்றுரீதியாக ராஜஸ்தான் தார் பாலைவனம் ஒருகாலத்தில் பசுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் பருவக்காற்று கிழக்கு நோக்கி நகர்ந்தது தான் தார் பாலைவனம் உருவாக முக்கியமான காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த காலத்தில் பருவக்காற்று மேற்கு நோக்கி விரிவடையத் தொடங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் பசுமையான பகுதியாக தார் பாலைவனம் மாறும் எனக் கூறப்படுகிறது.

தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?
சலாலா : 3 மாதம் மட்டும் மழைக்காடாக மாறும் பாலைவனம் - ஓமன் அதிசய காடு பற்றி தெரியுமா?

ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுபோல தார் பாலைவனம் பசுமையாக மாறினால் வருங்காலத்தில் இந்தியாவின் உணவுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.

அதே வேளையில் வடகிழக்கு பகுதியில் மழைப் பொழிவு 10 விழுக்காடு குறையவும் வாய்ப்பு இருக்கிறது. தார் பாலைவனம் பசுமையாக மாறும்போது அதன் சமூக - பொருளாதார நிலையும் மாற்றம் காணும் என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தார் பாலைவனம்: இன்னும் 100 ஆண்டுகளில் பசுமையான காடாக மாறுமா? - என்ன சொல்கிறது புதிய ஆய்வு?
Travel: சஹாரா முதல் தார் வரை - உலகின் மிக அழகான பாலைவனங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com