
தங்களது கேங்க் லீடரின் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், சுமார் 20 கார்களை திருடி விற்றுள்ளனர் டெல்லியில் ஒரு கும்பல்.
டெல்லி காவல் துறையின் Anti-Auto Theft Squad குழு தெற்கு டெல்லிப் பகுதியில் சமீபத்தில் நால்வரை கைது செய்தது. இவர்கள் சொகுசு கார்களின் பாகங்களை திருடி விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது, தங்களது கேங்கின் தலைவன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் இவ்வாறு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்
இந்த திருட்டில் ஈடுபட்ட லக்கி ஒரு வேர்ஹவுஸில் மேலாளராக பணியாற்றுகிறார். இவருடன் சேர்த்து சஃபீக், மஜீம் மற்றும் ராம் சஞ்சீவன் ஆகிய மூவரும் பணியாற்றுகின்றனர்.
இவர்களின் குழுத்தலைவன் ஆஷிஷ் மருத்துவமனையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவருகிறார். இவரது ஐடியாவின் பேரில் தான் இந்த கும்பல் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.
நால்வரும் இணைந்து டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அதன் பாகங்களை சேகரித்தனர்.
பின்னர் அதனை வெவ்வேறு இடங்களுக்கு விற்றுள்ளனர். தகவல்களில்படி, வேர்ஹவுஸை லக்கி நிர்வகித்து வந்தார். இங்கு தான் திருடப்படும் கார்கள் வைக்கப்படுகின்றன. மஜீம் மற்றும் சஃபீக் கார்களை திருடி அதன் பாகங்களை கைப்பற்றினர் மற்றும் ராம் அந்த பாகங்களை விற்றுள்ளார்.
இந்த வேர்ஹவுஸில் 50க்கும் மேற்பட்ட கார்களின் பாகங்களை கைப்பற்றியுள்ளனர் காவல் துறையினர். மேலும் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் காவல் துறை கைப்பற்றியுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust