தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

காலப்போக்கில், இந்த தக்காளி இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்தியர்களின் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக மாறியது. கூட்டு, பொரியல், குழம்பு தொடங்கி பிரியாணி, ரசம் என எல்லா உணவிற்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது.
தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்Twitter
Published on

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. பருவநிலை காரணமாக பல இடங்களில் குறைந்த உற்பத்தியே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

தக்காளி கிலோவுக்கு ₹100-150 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியை தவிர்த்து எந்த உணவும் செய்ய முடியாது, பிரியாணியை விடுங்கள் ஒரு ரசம் வைக்க வேண்டும் என்றால் கூட தக்காளியின் தேவை இருக்கிறது. அந்த அளவிற்கு தக்காளி அவசியமாகிவிட்டது.

சமையல் ராணியான தக்காளி இந்தியாவிற்கு எப்படி வந்தது?

தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டஸ் மலைத் தொடர்களில் தக்காளி முதன்முதலில் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்காவின் தட்பவெப்ப நிலையும் தக்காளி விளைச்சலுக்கு உகந்ததாக அமைந்திருக்கிறது.

அதன் பின்னர் தக்காளி தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஐரோப்பாவில் விளைந்த தக்காளி, மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும், அதனால், அவை “மஞ்சள் ஆப்பிள்கள்” என்று அழைக்கப்பட்டதாக சில தகவல்கள் இருகின்றன.

தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
பிரியாணி டூ சமோசா : இந்தியா, அரபு நாடுகள் இடையிலான உணவுப் பரிமாற்றம் - உணவு சரித்திரம்

காலப்போக்கில், இந்த தக்காளி இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்தியர்களின் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக மாறியது. கூட்டு, பொரியல், குழம்பு தொடங்கி பிரியாணி, ரசம் என எல்லா உணவிற்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது.

சமையல் ராணி என்று அறியப்படும் தக்காளி போர்ச்சுக்கீசியர்களால் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தக்காளிக்கு இந்திய மண்ணில் 200 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கிடையாது. ஒரு காலத்தில் தெலுங்கு மாநிலங்களிலோ, உத்தர பிரதேசத்திலேயோ தக்காளி சாப்பிடுவது கிடையாது. ஆனால் இன்று பரவலாக நாட்டில் எல்லா இடங்களிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, உலகளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 2022ல் 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக, தேசிய தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது.

தக்காளி இந்தியாவிற்குள் எப்படி வந்தது தெரியுமா? சமையல் ராணி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
பண்டைய இந்தியர்கள் என்ன சாப்பிட்டார்கள்? பின்பற்றிய உணவு முறைகள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com