ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் சேவாக்!

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.
ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் சேவாக்!
ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் சேவாக்!Twitter
Published on

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாக கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.

ஒடிசா பால்சோர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தானது நாட்டையே உலுக்கியுள்ளது.

சுமார் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 1000 பேருக்கு மேல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்கள் என அனைவருக்குமே அரசாங்கம் இழப்பீடுகளையும் நிவாரணங்களையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.

தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்த சேவாக், “இந்த துயரமான சமயத்தில், என்னால் குறைந்தபட்சம் ஏதாவது செய்யமுடியும் என்றால், உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி பொறுப்பை ஏற்பதே. சேவாக் இண்டர்னேஷனள் பள்ளியில், இவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்” எனக் கூறியிருக்கிறார் சேவாக்.

ரயில் விபத்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவர், “இந்த புகைப்படம் நம்மை நீண்ட நாட்களுக்கு நம்மை அச்சத்தில் ஆழ்த்தப்போகிறது” என்றும் கூறியிருந்தார்.

ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் சேவாக்!
ஒடிசா ரயில் விபத்து: 14 ஆண்டுக்கு பின் இதே இடத்தில் கோர ரயில் விபத்து! அன்று என்ன நடந்தது?
ஒடிசா ரயில் விபத்து: 14 ஆண்டுக்கு பின் இதே இடத்தில் கோர ரயில் விபத்து! அன்று என்ன நடந்தது?
ஒடிசா ரயில் விபத்து: 14 ஆண்டுக்கு பின் இதே இடத்தில் கோர ரயில் விபத்து! அன்று என்ன நடந்தது?ட்விட்டர்

சேவாக்கின் இந்த இண்டர்னேஷனல் போர்டிங் ஸ்கூல் ஹரியானாவில் அமைந்துள்ளது. 2011ல் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், கல்வியுடன் விளையாட்டு போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ரயிலில் பாதுகாப்புக்காக பொறுத்தப்படும் தொழில்நுட்ப கருவியான கவச் சிஸ்டம் இல்லாததும், ஒடிசாவில் இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் இருந்தும், தவறாக சிக்னல் வழங்கப்பட்டதும் தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

ஒடிசா ரயில் விபத்து: இறந்தவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் சேவாக்!
ஒடிசா ரயில் விபத்து: மீட்பு பணியின்போது கிடைத்த காதல் கடிதங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com