சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?

இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் புத்தேர் குகைகளை சுற்றிப்பார்க்கலாம், தியோபன் என்ற இடத்தில் பறவைகள் கண்காணிப்பு (பர்ட் விசிட்டிங்) மற்றும் மலையேற்றம் மேற்கொள்ளலாம்.
சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?
சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?Twitter

நகரங்களின் நெரிசலும் கூச்சலும் தான் கொஞ்சம் ஓய்வாக இருக்க சுற்றுலாத் தலங்களை நோக்கி  செல்ல காரணமாக இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் சுற்றுலாத் தலங்கள் கூட நெரிசலும் கூச்சலுமாக இருப்பதைக் காண்கிறோம்.

பெரிய அளவில் மக்கள் கவனம் பெறாத சொர்க்கம் போல இருக்கும் சுற்றுலாத்தலங்கள் சில இருக்கின்றன. அப்படிப்பட்ட தலங்களை கண்டறியும் போது பயணம் செய்பவர்களுக்கு சொல்ல முடியாத இன்பம் கிடைக்கும்.

டேராடூன், ரிஷிகேஷ் என இரண்டு முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு இடையில் இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு சொர்க்க பூமி.

சக்ரதா என்ற அந்த மலையில் கூட்டம் இல்லாமல் நீங்கள் தான் ராஜா என ஒய்யாரமாக நேரத்தை செலவிடலாம். அமைதியாக உட்கார்ந்து காபி பருகவும், காடுகளை சுற்றிவரும், நீர் வீழ்ச்சிகளில் நீராடவும் இது சிறந்த இடம். 

இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் புத்தேர் குகைகளை சுற்றிப்பார்க்கலாம், தியோபன் என்ற இடத்தில் பறவைகள் கண்காணிப்பு (பார்ட் வாட்சிங்) மற்றும் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பல சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும் சக்ரதாவுக்கு தனி சிறப்புகள் உள்ளது. இங்கிருக்கும் இராணுவ முகாமைக் கடந்து இந்தியர்கள் மட்டும் தான் செல்ல முடியும். 

வெளிநாட்டவர்களுக்கு இந்த இடத்தைப் பார்வையிட அனுமதியில்லை. எனவே இங்கு செல்ல வேண்டுமெனில் நாம் இந்தியர் தான் என்பதற்கான அடையாள அட்டைத் தேவை.

சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?
Vietnam: கடலுக்குள் மனித காலடி தடமேபடாத செங்குத்து மலைகள்! - உலகிலேயே அழகான இடம் இதுதானா?

சக்ரதா 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்-இந்தியா இராணுவத்தின் இராணுவ முகாமாக செயல்பட்டது. 1947ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய இராணுவத்தின் முகாமாக செயல்படத் தொடங்கியது. இதனால் இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இடமாக இருக்கிறது. 

சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?
Borobudur : எரிமலை சாம்பலில் மூடி கிடந்த உலகின் மிக பெரிய புத்தர் கோவில் பற்றி தெரியுமா?

பெரிய அளவில் சுற்றுலா உள்கட்டமைப்புகள் இல்லை என்றாலும் இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழல் காரணமாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகிறது சக்ரதா.

சக்ரதா டேராடூனில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா - சீனா எல்லையில் இருக்கிறது.

சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா?
வயநாடு பரிதாபங்கள்: சாஃப்ட்டான பரோட்டா முதல் ஜிப் லைன் ரைடு வரை - ஒரு ஃப்லாப் ட்ரிப்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com