Indian Railways: ஒருவரின் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி வேறு ஒருவர் பயணிக்க முடியுமா?

ஒரு சில நேரங்களில் டிக்கெட் எடுத்தவர் பயணிக்காமல் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பயணிக்க நேரிடும். இது போன்ற சமயத்தில் ஏற்கனவே வேறு ஒருவர் பெயரில் எடுத்த பயண சீட்டை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
Indian Railways: ஒருவரின் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி வேறு ஒருவர் பயணிக்க முடியுமா?
Indian Railways: ஒருவரின் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி வேறு ஒருவர் பயணிக்க முடியுமா?twitter

177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதில் பெரும்பாலான வசதிகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை. ஒரு சில வழிகளை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

ரயில் டிக்கெட்டுகளை நேரில் சென்று ரயில் நிலையத்திலோ ஏஜென்ட் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலம் பதிவு செய்வோம். பெயர் வயதை கொடுத்து பதிவு செய்வோம். டிக்கெட் சோதனையின் போது நமது பெயரை வைத்து சரிபார்ப்பார்கள்.

ஒரு சில நேரங்களில் டிக்கெட் எடுத்தவர் பயணிக்காமல் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பயணிக்க நேரிடும். இது போன்ற சமயத்தில் ஏற்கனவே வேறு ஒருவர் பெயரில் எடுத்த பயண சீட்டை பயன்படுத்த முடியுமா?

ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் இன்னொருவர் பயணிக்கலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. ஒரு சில விஷயங்களை செய்தால் அதே சீட்டில் மற்றவர் பயணிக்கலாம்.

பதிவு செய்தவரின் தாய், தந்தை, மனைவி, மகன், மகள் உள்ளிட்ட ஒருவரின் குடும்பத்தினர் பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணிக்கலாம்.

அதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ரயில் முன்பதிவு அலுவலகத்தில் எழுத்துப்பூர்வ கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால் அவர்கள் விண்ணப்பத்தை வழங்குவார்கள்.

தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை ஜெராக்ஸ் மற்றும் முன்பதிவு செய்த டிக்கெட்டை வழங்க வேண்டும்.

அதன்பிறகு பெயர் மாற்றத்துடன் டிக்கெட் கொடுப்பார்கள். தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தாது. ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும்.

இந்த வசதி ஆன்லைனில் இல்லை. முன்பதிவு அலுவலகத்திற்குச் சென்றால் மட்டுமே அதை மாற்ற முடியும். இதற்கு ரயில்வே நிர்வாகம் எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Railways: ஒருவரின் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி வேறு ஒருவர் பயணிக்க முடியுமா?
தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com