'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது? | வீடியோ

அந்த புலி வளர்ந்த, கொழுத்த நீலான் ஒன்றை தனக்கு இரையாகத் தேர்ந்தெடுத்து உள்ளது. ஆசியாவிலேயே இருக்கும் மிகப் பெரிய மான் வகை நிலான். இந்த வளர்ந்த நிலான் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கலாம்.
'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது?
'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது? Twitter
Published on

புலிகளும் சிங்கமும் எப்போதும் ஒரே காட்டில் வாழ முடியாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். உண்மையில் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் புலியும், சிங்கமும் கிடையாது.

புலிகள் இருக்கும் காட்டுக்கு அவை தான் ராஜா, போட்டிக்கு யாருமில்லை. என்ன தான் ராஜாவாக இருந்தாலும் புலிகளுக்கு அவ்வளவு எளிதில் உணவு கிடைப்பதில்லை. சமவெளியில் வாழும் சிங்கங்கள் ஓடும் இரையைத் துரத்திப் பிடித்தால் போதும் ஆனால் புலிகள் காட்டில் பதுங்கி பாய வேண்டும். மரங்களுக்கு இடையில் துள்ளி குதிக்கும் மான்களை வேட்டையாடுவது கடினமான ஒன்று என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.

இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோவை ராஜேஷ் சனாப் என்ற வைல்ட் லைஃப் புகைப்படக்காரர் பகிர்ந்துள்ளார். இது மத்தியபிரதேசம் மாநிலம், நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்புரா வனவிலங்கு சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த புலி வளர்ந்த, கொழுத்த நீலான் ஒன்றை தனக்கு இரையாகத் தேர்ந்தெடுத்து உள்ளது. ஆசியாவிலேயே இருக்கும் மிகப் பெரிய மான் வகை நீலான். இந்த வளர்ந்த நீலான் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கலாம்.

வேட்டையாட நினைக்கும் புலிக்கும் மானுக்கும் இடையிலான கண்ணாமூச்சு விளையாட்டை வீடியோவில் பார்க்கலாம்...

'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது?
மிக மிக அரிதான 'கருப்பு புலி' கேமராவில் பிடிபட்டது - எங்கு? | Video
'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது?
இணையை தேடி இந்திய எல்லையை கடக்கும் வங்கதேச பெண் புலிகள்

மானை 80 மீட்டர் தொலைவிலேயே பார்த்துவிட்ட புலியானது பதுங்கி பதுங்கி அதன் அருகில் செல்கிறது. பக்கத்தில் சென்ற பிறகு மறைந்துகொள்ள அதற்கு புற்கள் இல்லை. இதனால் சாலையிலேயே பதுங்குகிறது. புலி பதுங்குவதை பார்த்துவிட்ட நீலான் கொஞ்சம் கொஞ்சமாக அதனிடமிருந்து பின் வாங்கியது. வீடியோ முடியும் வரை புலி நீலானை வேட்டையாடவில்லை.

இந்த வீடியோ ட்விட்டரில் கிட்டத்தட்ட 3000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த புலி இளமையான ஒன்றாக இன்னும் வேட்டையாட கற்றுக்கொள்ளாத ஒன்றாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது?
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com