"மாதவிடாயில் தான் கண்ணியம் இருக்கிறதா?" - தடையை உடைத்த பழங்குடி பெண்கள்

“ பேடுகள் (pads) பயன்படுத்த அவர்களுக்குப் பயிற்சி அளிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. ஆனால், மாதவிடாயில் கண்ணியத்தைக் காண்பதற்கும், அவமானம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களின் மனோபாவத்தை மாற்றுவதற்கும் அதிக நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது” என்று களப்பணியாளர் கூறினார்.
மாதவிடாயில் கண்ணிய தன்மை இருக்கிறதா? தடையை உடைத்த பழங்குடிப் பெண்கள்
மாதவிடாயில் கண்ணிய தன்மை இருக்கிறதா? தடையை உடைத்த பழங்குடிப் பெண்கள் Twitter
Published on

குஜராத்தின் டாங் மாவட்டத்தில் உள்ள சின்சினகௌதா கிராமத்தில் 84 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் கோட்வாலியா மற்றும் கோக்னி ஆகிய இரண்டு பழங்குடி சமூகங்கள் உள்ளன.

கோட்வாலியா சமூகத்தில் சுமார் 50 நிலமற்ற குடும்பங்கள் உள்ளன. கோட்வாலியா ஆண்களும் பெண்களும் அருகிலுள்ள காட்டில் இருந்து மூங்கிலை சேகரித்து மூங்கில் கூடைகள் செய்கிறார்கள்.

வாரத்திற்கு 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். சூரத், நாசிக், அவுரங்காபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தலா ரூ.12க்கு கூடைகளை வாங்குகின்றனர். இதுவே கோட்வாலியா சமூகத்தின் முக்கிய வருமான ஆதாரமாகும்.

தண்ணீர் இல்லை, கழிப்பறை இல்லை

2017 ஆம் ஆண்டில், கிராமத்தில் உள்ள கோட்வாலியாக்களின் ஒரு வீட்டில் கூட கழிப்பறை இல்லை. கிராமத்தில் கிணறு இருந்தும் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வரவில்லை. கிராம மக்களுக்கு சுகாதாரம் ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், இளம் வயதினர்கள் மாதவிடாய் காலத்தில் சந்தையில் இருந்து தலா 20 ரூபாய்க்கு வாங்கிய துணியைப் பயன்படுத்தி வந்தனர்.

துணியை துவைத்து, மற்ற வெளிப்புற ஆடைகளுக்கு அடியில் மறைத்து காயவைத்தனர். தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குள் வேரூன்றியிருந்த வெட்கத்தின் காரணமாக யாரும் பார்க்க முடியாத வகையில் கழிவறைக்குள் மாதவிடாய் துணியை உலர்த்தினார்கள்.

மாதவிடாயில் கண்ணிய தன்மை இருக்கிறதா? தடையை உடைத்த பழங்குடிப் பெண்கள்
பெண்கள் ஆரோக்கியம் : மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? சமாளிப்பது எப்படி?

மாதவிடாய் சுகாதாரம்

முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்ட பிறகு, களப்பணியாளர்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்த அமர்வுகளை நடத்தினர்.

“பேடுகள் (pads) பயன்படுத்த அவர்களுக்குப் பயிற்சி அளிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. ஆனால், மாதவிடாயில் கண்ணியத்தைக் காண்பதற்கும், அவமானம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களின் மனோபாவத்தை மாற்றுவதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்பட்டது” என்று களப்பணியாளர் ரிப்கா பென் கூறினார்.

இப்போது அந்த பெண்களுக்கு பேடுகள் (pads) தயாரித்து விற்பதும் கூட வாழ்வாதாரமாக மாறிருக்கிறது.

மாதவிடாயில் கண்ணிய தன்மை இருக்கிறதா? தடையை உடைத்த பழங்குடிப் பெண்கள்
மாதவிடாய் நாட்களில் பெண்களை காட்டுக்கு அனுப்பும் கிராமம் - இந்த வழக்கம் எப்படி வந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com