இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறு
இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறுTwitter

இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறு

போர்த்துகீசியர்கள் வந்து பம்பாய் தீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்திய துணைக்கண்டத்தில் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த போர்த்துகீசியர்களின் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.
Published on

இன்று நாம் அறிந்த மும்பை, ஒரு காலத்தில் ஏழு தீவுகளின் தொகுப்பாக இருந்தது குறித்து உங்களுக்கு தெரியுமா? மும்பை நகரம், முன்பு பம்பாய் என்று அழைக்கப்பட்டது.

பம்பாய் தீவு, பரேல், மசகான், மாஹிம், கொலாபா, வொர்லி மற்றும் ஓல்ட் வுமன்ஸ் தீவு ஆகிய ஏழு தீவுகள் ஒன்றிணைந்து தான் இன்று இருக்கும் மும்பை நகரம் உருவானது.

இதற்கு முன்பு இந்த தீவுகளில் மீன்பிடி சமூகங்கள் மற்றும் பிற பல்வேறு சமூகங்கள் வசித்து வந்தன. ஒவ்வொன்றும் தனித்துவமான கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டிருந்தன.

இந்த தீவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர்கள்

போர்த்துகீசியர்கள் வந்து பம்பாய் தீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்திய துணைக்கண்டத்தில் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த போர்த்துகீசியர்களின் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.

அவர்கள் குடியேறியதும்,வர்த்தக நிலையம், கோட்டைகள் மற்றும் பல்வேறு குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.

போர்த்துகீசியர்கள் மும்பையை ஒரு பெரிய துறைமுகமாக நிறுவியிருந்தனர்.

இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறு
வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?

மும்பை, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், நகரமயமாக்கலின் அடிப்படையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் பெருமளவில் குவிந்தனர்.

இதனால் நகரம் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் அடையாளமாக மாறியது. பின்னர் 90 களின் பிற்பகுதியில் மராத்தி கலாச்சார பாரம்பரியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் பம்பாயிலிருந்து அந்த நகரம் மும்பை ஆனது.

மும்பை என்ற பெயர் கோலி சமூகத்தின் புரவலர் இந்து தெய்வமான மும்பாதேவி என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. தாய் என்று பொருள்படும் ’ஐ’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு மும்பை ஆனது.

இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறு
மும்பை டு பெங்களூரு: இந்தியாவின் 5 பணக்கார நகரங்கள் இவைதான்- சென்னைக்கு இடமிருக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com