கங்கை நதியில் வீசி எறியப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள்- முகமது அலி வழியில் மல்யுத்த வீரர்கள்?

குத்துச்சண்டை வீரர்கள் தங்கள் நாட்டுக்காக போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசி எறிவது உலக சேம்பியன் குத்துச்சண்டை வீரரான முகமது அலியை நினைவுபடுத்துகிறது.
கங்கை நதியில் வீசி எறியப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள்- முகமது அலி வழியில் மல்யுத்த வீரர்கள்?
கங்கை நதியில் வீசி எறியப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள்- முகமது அலி வழியில் மல்யுத்த வீரர்கள்? Twitter

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார். இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்களை முன்னிட்டு இவரைக் கைது செய்யக்கோரி கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் ஜந்தல் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை ஒட்டி நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, அவர்கள் மீது 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ்  பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டது.  வினேஷ் லோகா, சாக்‌ஷி மாலிக் மற்றும் சங்கீதா போகட் ஆகியோர் இரவில் விடுவிக்கப்பட்டனர். 

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்த இடத்தில் இருந்து மல்யுத்த வீரர்களின் உடைமைகளை காவல்துறையினர் அகற்றியிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவர் என காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். 

இனி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் வேறு இடங்களில், வேறு வடிவங்களில் தங்கள் போராட்டத்தைத் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசிஎறியப் போவதாக அறிவித்துள்ளனர். “கங்கையில் பதக்கங்களை எறிந்த பின்னால் நாங்கள் வாழ்வதில் அர்த்தம் இருக்காது. நாங்கள் டெல்லி இந்தியா கேட்டில் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வோம்” என மல்யுத்த வீரர் விக்னேஷ் போகத் அறிவித்துள்ளார். 

முகமது அலி

இது போல தாங்கள் நாட்டுக்காக போராடி வென்ற பதக்கத்தை நதியில் வீசி எறிவது உலக சேம்பியன் குத்துச்சண்டை வீரரான முகமது அலியை நினைவுபடுத்துகிறது. 

1960ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அலி அதன் பிறகு தனக்கு உரிய மரியாதை கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அமெரிக்க வெள்ளை இனவெறியர்கள் கண்களில் அவர் கறுப்பின அடிமையாகவே தெரிந்தார்.

ஒரு உணவகத்தில் அலி கறுப்பின நபராக இருந்ததற்காக அவமதிக்கப்பட்டு உணவகத்தை விட்டு வெளியில் துரத்தப்பட்டார். அதனால் கோவம் கொண்டு தனது பதக்கத்தை ஓஹியோ நதியில் வீசி எறிந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

கங்கை நதியில் வீசி எறியப்படும் ஒலிம்பிக் பதக்கங்கள்- முகமது அலி வழியில் மல்யுத்த வீரர்கள்?
”இவர்களுக்கு வெட்கமே இல்லை” போலி புகைப்படம் விவகாரம் - இந்திய மல்யுத்த வீரர்கள் காட்டம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com