”இவர்களுக்கு வெட்கமே இல்லை” போலி புகைப்படம் விவகாரம் - இந்திய மல்யுத்த வீரர்கள் காட்டம்!

அவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றிச் சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. அந்த புகைப்படத்தில், வீரர்கள் வினேஷ் போகாட், சங்கீதா போகாட் உள்ளிட்டோர் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்தது போல இருந்தது.
”இவர்களுக்கு வெட்கமே இல்லை” போலி புகைப்படம் விவகாரம் - இந்திய மல்யுத்த வீரர்கள் காட்டம்!
”இவர்களுக்கு வெட்கமே இல்லை” போலி புகைப்படம் விவகாரம் - இந்திய மல்யுத்த வீரர்கள் காட்டம்!twitter

இந்திய மல்யுத்த வீரர்கள், WFI (Wrestlers Federation of India) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில், சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 23 முதல் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். போராட்டக்குழு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த பிரதமரை சந்திக்க நாடாளுமன்றம் நோக்கி நகர்ந்தது. அப்போது காவல் துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை ஒரு பஸ்ஸில் ஏற்றிச் சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. அந்த புகைப்படத்தில், வீரர்கள் வினேஷ் போகாட், சங்கீதா போகாட் உள்ளிட்டோர் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்தது போல இருந்தது.

”இவர்களுக்கு வெட்கமே இல்லை” போலி புகைப்படம் விவகாரம் - இந்திய மல்யுத்த வீரர்கள் காட்டம்!
உக்ரைன் போர் முதல் ஹிஜாப் போராட்டம் வரை: 2022ன் 5 முக்கிய நிகழ்வுகள்

இணையத்தில் இப்படம் வைரலாக, மல்யுத்த வீரர்கள் நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. போராட்டக் களத்தில் ஒரு முகத்துடனும், கைது செய்யப்பட்ட பிறகு ஒரு முகத்துடனும் இருப்பதாகக் கூறி வீரர்களுக்கு எதிராக பலரும் விமர்சங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் நிஜமானது அல்ல, சித்தரிக்கப்பட்டது என விளக்கியிருந்தார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா.

தன் ட்விட்டர் பக்கத்தில், நிஜமான புகைப்படத்தை பகிர்ந்தவர்,

“ஐடி செல் ஆட்கள் இந்த போலியான புகைப்படத்தை ஏஐ மூலம் தவறாக சித்தரித்து பகிர்ந்து வருகின்றனர். இது நிஜமல்ல. தவறாக செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக வழக்கு பதியப்படும் என்பதை நாங்கள் விளக்கிக்கொள்ள விரும்புகிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், “இதைச் செய்பவர்களுக்கு வெட்கமே இல்லை. இது மாதிரியான ஆட்களை கடவுள் எப்படி படைத்தார்? மனமுடைந்து நிற்கும் பெண்களின் முகத்தில் சிரிப்பை ஒட்டுகிறார்கள். இவர்களுக்கு இதயமே இல்லை என்று நினைக்கிறேன்" என்றார்.

இந்த போலி புகைப்பட விவகாரம் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

”இவர்களுக்கு வெட்கமே இல்லை” போலி புகைப்படம் விவகாரம் - இந்திய மல்யுத்த வீரர்கள் காட்டம்!
ஏக்னாத் ஷிண்டே: சரியும் வெங்காய விலை, வலுக்கும் போராட்டம் - என்ன சொல்கிறார் முதல்வர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com