சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!

ஒவ்வொரு மாதம் மின்சாரம் கணக்கிடப்படும் போது தயாரிக்கப்பட்ட மின்சாரத்துக்கு அதிகமாக பயன்படுத்தியிருந்தால் மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 60% - 100% வரை அம்மக்களின் மின்சார கட்டணம் குறையும் என அரசு தெரிவித்துள்ளது.
சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!
சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!Twitter

இந்தியாவில் முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கக்கூடிய முதல் கிராம் என்ற பெயரை பெற்றிருக்கிறது குஜராத்தில் உள்ள மோதிரா கிராமம்.

அதிகப்படியாக அனல் மற்றும் அணுமின் சக்திகளைப் பயன்படுத்துவது சுற்று சூழலுக்கு பல வகைகளில் தீங்கு விளைவிக்கிறது. மற்றும் அதற்கு அதிக அளவிலான வளங்கள் தேவைப்படுகிறது.

இதனால் உலகம் முழுவதும் புதுபிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானதாக இந்த கிராமம் பார்க்கப்படுகிறது.

மோதிரா கிராமத்தில் புகழ் பெற்ற சூரியக் கோவில் இருக்கிறது. இதனை அடையாளப்படுத்தும் வகையில், இந்த கிராமம் முழுவதுமாக சூரியமின் சக்தியில் இயங்க மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து சூரியமின்சக்தி திட்டத்தை செயல்படுத்துயுள்ளன.

இந்த திட்டத்துக்கு 80.66 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கோவில்
சூரிய கோவில்

இந்த கிராமத்தில் மொத்தம் 6,500 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் வீட்டுக்கூரைகளில் இப்போது சூரியத் தகடு பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பகலில் நேரடியாக மின்சாரத்தை பெறுகின்றனர். பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை இரவில் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு மாதம் மின்சாரம் கணக்கிடப்படும் போது தயாரிக்கப்பட்ட மின்சாரத்துக்கு அதிகமாக பயன்படுத்தியிருந்தால் மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 60% - 100% வரை அம்மக்களின் மின்சார கட்டணம் குறையும் என அரசு தெரிவித்துள்ளது.

சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!
420 மனிதர்கள், 24 கோயில், செருப்பு அணியாத கால்கள்: கொடைக்கானல் அருகே ஓர் ஆச்சர்ய கிராமம்

மேலும், பயன்பாட்டுக்கு அதிகமான மின்சாரம் தயாரிக்கப்பட்டிருந்தால் அதற்கான பணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதாவது அதிகப்படியான மின்சாரத்தை அரசு வாங்கிக்கொள்கிறது.

இந்த கிராம மக்கள் தையல், விவசாயம், மண்பாண்டம் செய்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 50% புதுபிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் இலக்கை எட்ட இந்த கிராமம் முன்னோடியாக இருக்கும்.

சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!
குரங்களுக்கு சொத்துரிமை அளித்துவரும் வினோத கிராமம்! - பாரம்பரியத்தை இழக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com