இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?
இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?Twitter

இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

2014-15ல் 86,647 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம், 2022-23 ஆண்டில் 1,72,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதையே காட்டுகிறது என்றாலும், இந்த வளர்ச்சியால் சாமானியர்கள் பலனடைந்தனரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
Published on

இந்தியாவின் தனிநபர் வருமானம் பாஜக ஆட்சி செய்யும் 9 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இது இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதையே காட்டுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியால் சாமானியர்கள் பலனடைந்தனரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளபடி ஒரு தனிநபரின் ஆண்டு வருமானம் 2022-23 ஆண்டில் 1,72,000 ரூபாய்.

இது 2014-15ல் இருந்த 86,647 ரூபாயை விட 99 விழுக்காடு அதிகம்.

நாட்டின் தனிநபர் வருமானம் உயருகிறது என்றால், மக்கள் தொகையில் உள்ள அனைவருடைய வாழ்க்கைத் தரமுமே உயருகிறது என எடுத்துக்கொள்ள முடியாது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்

என்னதான் தனிநபர் வருமானம் பெருகியிருந்தாலும் மொத்தமாக அந்த செல்வம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கு எப்படி பிரித்துக்கொடுக்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

ஒரு நாட்டில் தனிநபர் வருமானம் என்பது ஒட்டுமொத்த மக்களின் மொத்த வருமானத்தை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும்.

தனிநபர் வருமானம்
தனிநபர் வருமானம்

இதனை சராசரி தனிநபர் வருமானமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் எல்லா வருமான குழுக்களைச் சேர்ந்த மக்களும் (அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோயர் கிளாஸ்) இடம் பெறுவதனால் ஒவ்வொருவருக்கும் இந்த வருமானம் கிடைத்திருக்கும் என்று கருத முடியாது.

எனவே, நாட்டின் தனிநபர் வருமானம் உயருகிறது என்றால், மக்கள் தொகையில் உள்ள அனைவருடைய வாழ்க்கைத் தரமுமே உயருகிறது என எடுத்துக்கொள்ள முடியாது.

குறிப்பாக இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையுள்ள நாட்டில் தனிநபர் வருமான உயர்வு மக்களுக்கு உதவக்கூடும் என எடுத்துக்கொள்ளக் கூடாது.

இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?
இந்தியா பட்ஜெட் 2023: ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர்

வருமானம் சமத்துவமின்மை
வருமானம் சமத்துவமின்மை

ஆக்ஸ்பார்ம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஆராய்ச்சிகள் பணக்கார இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேசமயம், கொரோனா காலகட்டத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வருமானம் பல மடங்கு குறைந்துள்ளது.

தொற்றுநோய் மட்டுமல்லாமல் அதிகப்படியான பண வீக்கம் காரணமாகவும் பல கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?
இலங்கை பொருளாதாரம் திவாலானது எப்படி? - பகுதி 1

சராசரி தனிநபர் வருமானம் என்பது வருமான சமத்துவம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் தனி நபர் வருமானம் அதிகமாக இருந்தாலும். அந்த வருமானத்தை மற்றும் அதை விட அதிக வருமானத்தைப் பெறும் மக்கள் 10 விழுக்காடு பேர் தான்.

பொருளாதாரம் என்னதான் அதிகரித்து தனிநபர் வருமானம் உயர்ந்தாலும் பெரும்பாலானோர் பணக்காரர்களாக இல்லை.

எனவே தனிநபர் வருமானம் என்பது பொருளாதர வளர்ச்சியை கணக்கிட உதவுமே அன்றி, மக்களின் பொருளாதார நிலையைக் குறிக்க பயன்படாது. மேலும் இந்தியாவில் இது வருமான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கவே செய்கிறது.

இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?
கொரோனா : இந்தியப் பொருளாதாரம் பாதிப்புகளிலிருந்து மீள 15 ஆண்டுகள் ஆகலாம் - RBI அறிக்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com