கேதர்நாத்: கோடையிலும் பனிப்பொழிவு - என்ன நடக்கிறது அங்கே?

உத்தராகண்ட் முழுவதுமே சில நாட்களுக்கு மோசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 13 நாட்களாக கேதர்நாத்தில் பனிப்பொழிவு இருந்துவருகிறது. நாட்கள் செல்ல செல்ல குளிரும் அதிகரிக்கிறது எனக் கூறுகின்றனர்.
கேதர்நாத்: கோடையிலும் பனிப்பொழிவு - என்ன நடக்கிறது அங்கே?
கேதர்நாத்: கோடையிலும் பனிப்பொழிவு - என்ன நடக்கிறது அங்கே?Twitter
Published on

கேதர்நாத்தில் வழக்கத்துக்கு மாறாக கோடைக்காலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலயத்துக்குச் செல்லும் யாத்ரீகள் பாதுகாப்பாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

உத்தராகண்டில் உள்ள கேதர்நாத்தில் பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதனால் குளிர்காலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் வெயில் காலத்திலும் கூட இந்த ஆண்டு பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வானிலை மையம் அடுத்த 4 நான்கு நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மழைப் பொழிவு இருக்கும் என எச்சரித்தது.

உத்தராகண்ட் முழுவதுமே சில நாட்களுக்கு மோசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 13 நாட்களாக கேதர்நாத்தில் பனிப்பொழிவு இருந்துவருகிறது. நாட்கள் செல்ல செல்ல குளிரும் அதிகரிக்கிறது எனக் கூறுகின்றனர்.

கேதர்நாத்திலும் பத்ரிநாத்திலும் அதிகமான பனி இருப்பதனால் அங்கு வரும் யாத்ரீகளை ஸ்ரீநகரிலேயே நிறுத்தி வைக்கின்றனர் காவல்துறையினர்.

வானிலை சரியான பின்னர்தான் பயணிகள் அந்த பக்கமாக அனுமதிக்கப்படுவார்கள் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். கேதர்நாத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிந்துள்ளது.

கேதர்நாத்: கோடையிலும் பனிப்பொழிவு - என்ன நடக்கிறது அங்கே?
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

கொங்கண் கடற்கரை, கோவா, மத்திய மகாராஷ்டிரா தவிர மற்ற மாநிலங்களில் 4 நாட்களுக்கு மழைப்பொழியும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் மே2 வரை அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என ஐஎம்டி தெரிவித்திருந்தது. அதன் படி பெய்த மழையில் ஹைத்ராபாத் கொஞ்சம் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

இந்த மழையின் விளைவாக அடுத்தவாரம் வெப்ப அலைகள் இருக்காது எனக் கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு குறிப்பாக கோடைப் பருவ பழமான மாம்பழம் விவசாயிகளுக்கு பூக்கள் கீழே விழுந்து அறுவடையில் குறைவு இருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே கேதர்நாத்தில் அதிக பக்தர்கள் வழிபட வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு தவறான பருவமழை காரணமாக பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கேதர்நாத்: கோடையிலும் பனிப்பொழிவு - என்ன நடக்கிறது அங்கே?
கேதர்நாத் கோவிலுக்கு 'ரூ.5 கோடி' தட்சணை - அள்ளிக்கொடுத்த அம்பானி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com