500 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு உயிர் கொடுக்கும் மந்திரக் கிணறு - ஓர் அடடே ஸ்டோரி
500 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு உயிர் கொடுக்கும் மந்திரக் கிணறு - ஓர் அடடே ஸ்டோரிTwitter

500 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு உயிர் கொடுக்கும் மந்திரக் கிணறு - ஓர் அடடே ஸ்டோரி

500 ஆண்டுகளுக்கு முன் நீர் தேவையை தீர்ப்பதற்காக இந்த கமலா நீராழி கிணற்றை உருவாக்கியுள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை கிணற்றில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Published on

கோடைக்காலம் வந்துவிட்டாலே இந்த தண்ணீர் பிரச்னையும் சேர்ந்து வந்துவிடும். எவ்வளவு ஆழத்தில் போர் போட்டாலும் கோடைக்காலத்தில் கானல் நீராக தான் தெரியும்.

குளம், ஏரி, கிணறு என எல்லா நீர்நிலைகளிலும் ஒரே நிலை தான். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடியில் நீர்மட்டம் குறைந்துவிடும். ஆனால் 500 ஆண்டுகளாக எந்த கால சூழ்நிலையிலும் வற்றாத கிணறு ஒன்று உள்ளதாம்!

வறட்சி, வெயில்காலம், என எந்த காலத்திலும் இந்த கிணறு வறண்டுபோகவே இல்லையாம். எங்கே இருக்கிறது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் தான் இந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இதுவரை தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் பார்த்ததே இல்லையாம்.

சுற்றியிருக்கும் சுமார் 300 குடும்பங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கிணறு தான் உள்ளது. 300 குடும்பங்களின் தேவையை இந்த கிணறு சலிக்காமல் தீர்த்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் மாநகராட்சிக்கு மக்கள் குடிநீர் வரி கூட செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.

கோட்டயம் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவருக்கும் அள்ள அள்ள தண்ணீர் அளித்து வருவதால் இந்த கிணற்றை `மந்திர கிணறு’ என அழைக்கின்றனர்.

இக்கிணற்றின் உண்மையான பெயர், `கமலா நீராழி'. இந்த கிணறு முன்பு பார்ப்பனத் அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்தது.

கிணற்றின் உட்புறம் தாமரையின் 13 இதழ்களைப் போன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சிவப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

500 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு உயிர் கொடுக்கும் மந்திரக் கிணறு - ஓர் அடடே ஸ்டோரி
வேற்று கிரகங்களில் நீர் இருப்பது உண்மை; ஏலியன்ஸ் இருப்பது உண்மையா? - அதிர வைக்கும் ஆய்வு

500 ஆண்டுகளுக்கு முன் நீர் தேவையை தீர்ப்பதற்காக இந்த கமலா நீராழி கிணற்றை உருவாக்கியுள்ளனர். அன்றிலிருந்து இன்று வரை கிணற்றில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினசரி தண்ணீர் தேவைக்கு மக்கள் இந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எந்த கோடை காலநிலையிலும், கிணறு வறண்டு போவதில்லை. இது ஏன் என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இன்றும் உள்ளது.

500 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு உயிர் கொடுக்கும் மந்திரக் கிணறு - ஓர் அடடே ஸ்டோரி
பூமியின் நீர் சந்திரனுக்குப் போனது எப்படி? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு - அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com