கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி?

பழங்குடி கிராமத்தில் பிறந்து வறுமைக்கு இடையிலும் வெளிநாட்டு சென்று படிக்க வேண்டும் எனக் கனவு கண்ட பெண் கிரண் குர்மா. தனது கனவை எட்டியுள்ளது பலரையும் வியக்கவைத்துள்ளது.
கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி?
கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி?Twitter

கிரண் குர்மா தெலுங்கானாவில் உள்ள கத்சிரோலி மாவட்டத்தின் ரெகுதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த பகுதி நக்சல் பாதிப்புக்கு உள்ளான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறிய கிராமத்தில் இருந்து குடும்ப வறுமை, போக்குவரத்து வசதி இல்லாமையைக் கடந்து தினமும் 140 கிலோமீட்டர் மலைப்பாதையில் டாக்ஸி ஓட்டி படித்துள்ளார் கிரண்.

ஹைத்ராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தனது 27 வயதில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் கிரண்.

சர்வதேச சந்தைப் பொருளாதாரம் படிக்க வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைகழகத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு 40 லட்சம் ஊக்கத் தொகை கிடைத்திருக்கிறது.

இந்த உதவித் தொகை அவர் வெளிநாட்டில் படிக்க உதவும். அங்கு எதாவது வேலை செய்யலாம் என்றும் அவர் திட்டமிட்டுள்ளார்.



வெளிநாட்டில் வேலை செய்வது மட்டுமல்லாமல் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி அவரது குடும்பத்தையும் சமுகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பது அவரது கனவு.

கிரண் படிப்பதற்காக அவரது குடும்பம் முடிந்த ஊக்கத்தை வழங்கிவருகிறது. கிரணுக்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். படிப்பு தங்களது வாழ்க்கையை எப்படி மாற்ற முடியும் என்பதை கிரண் மூலம் அவர்கள் தெரிந்துகொள்கின்றனர்.

பட்டம் வாங்கிய பின்னர் டெல்லியில் பணியாற்று சூழல் கிரணுக்கு ஏற்பட்டது. ஆனால் அவர் உடனடியாக வீட்டுக்கு திரும்பவேண்டிய சூழல் எழுந்துவிட்டது.

வீட்டில் அவரது தந்தை விபத்தில் சிக்கினார். இந்த சம்பவம் கிரணை இன்னும் படித்து குடும்பத்தை வழுப்படுத்த வேண்டுமென உந்தியது.

கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி?
Ramya Ravi: பிரியாணி பிசினஸில் 10 கோடி சம்பாதிக்கும் பெண் - ஊர் குருவி பருந்தான கதை!



இங்கிலாந்தில் படிக்க இன்னும் கொஞ்சம் பணத் தேவை இருந்ததால் அதற்கு என்ன செய்யலாம் என சிந்திக்கத் தொடங்கினார்.

இதற்காக மும்பைக்கு வந்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் உதவிகோரினார். இறுதியாக ஏக்நாத் ஷிண்டே கிரணுக்கு உதவ முன்வந்தார்.

இங்கிலாந்து செல்லும் கிரணுக்கு வாழ்த்துகள்!

கிரண் குர்மா: டாக்ஸி ஓட்டும் பழங்குடி பெண் - மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது எப்படி?
பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடும் இந்திய கிராமம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com