Madhya Pradesh : அனுமதியின்றி சமோசா எடுத்து சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை - நடந்தது என்ன?

கடை உரிமையாளரிடம் அனுமதி கேட்காமல் சமோசா எடுத்துச் சாப்பிட்ட நபரை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
samosa
samosa Twitter
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சங்கர் நகரில் சோலா எனும் பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பத்தன்று உணவகத்தில் நுழைந்த வினோத் அஹிர்வர் என்ற நபர், கடைக்காரரின் அனுமதியின்றி சமோசாவை எடுத்துச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

மது போதையில் கடையினுள் வந்து, அனுமதி இன்றி சமோசாவை எடுத்துச் சாப்பிட்ட சம்பவம் கடையில் இருந்த உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அருகிலிருந்த கம்பை எடுத்து மகன் உதவியுடன் கடைக்காரர், வினோத் தலையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வினோத் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சமோசா கடை உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வார் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

samosa
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com