காட்டுத்தீ ஏற்படுத்திய விவசாயிக்கு வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிமன்றம்

மகாராஷ்டிராவில் பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது.
Law
LawTwitter
Published on

கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்திலுள்ள நந்த்காவ்ன் கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் என்ற விவசாயி தனது விவசாய தோட்டத்தில் உள்ள கரும்புகளை தீ வைத்து எரித்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

பலத்த காற்று காரணமாக இந்த தீயான அருகிலிருந்த வனப்பகுதிக்கும் பரவியது. இந்த காட்டுத் தீயால் காட்டிலிருந்த சுமார் 1,622 வளர்ந்த மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

law
law twitter

இதைத் தவிரப் பெரிய நிலப்பரப்பில் உள்ள புற்களும் சேதமடைந்துள்ளன. சுபாஷிடம் நடைபெற்ற விசாரணையில் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

ஆனால் காட்டுத்தீயை ஏற்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும், தவறுதலாக தீ பரவிவிட்டது என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 1000 மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Law
காட்டுத்தீ முன்பு வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி - என்ன நடந்தது.?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com