"20 ஆண்டுகள், ஒரே தட்டு" - இறந்த அம்மா குறித்த இளைஞரின் பதிவு இணையத்தில் வைரல்

அவரது அம்மா அந்த தட்டைத் தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாப்பிட பயன்படுத்தி வந்ததாகவும், அதன் காரணத்தை அவர் சமீபத்தில் தான் அறிந்தார் எனவும் பதிவிட்டிருந்தார்
"20 ஆண்டுகள், ஒரே தட்டு" - அம்மாவை குறித்த இளைஞரின் பதிவு இணையத்தில் வைரல்
"20 ஆண்டுகள், ஒரே தட்டு" - அம்மாவை குறித்த இளைஞரின் பதிவு இணையத்தில் வைரல்twitter
Published on

தனது தாய் 20 ஆண்டுகளாக ஒரே தட்டில் தான் உணவு உண்டு வந்தார் எனவும், அதன் காரணத்தை தான் இப்போது அவர் அறிந்ததாக இளைஞர் ஒருவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவு, இணையத்தை கண்கலங்கச் செய்துள்ளது.

நமது பெற்றோரின் ஒரு சிலப் பழக்கங்கள் நமக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக இருக்கும். பல ஆண்டுகளாக அவர்கள் அதனை கடைப்பிடித்து வந்திருப்பார்கள், அதன் காரணம் நாம் அறியாமல் இருந்திருக்கலாம். அது ஒரு நாள் நமக்கு தெரிய வரும்போது நம்மை நெகிழ்ச்சியடையச் செய்யும்.

விக்ரம் எஸ் புத்தநேசன் என்ற இளைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது தாயின் சாப்பாட்டு தட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். உடன், அவரது அம்மா அந்த தட்டைத் தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாப்பிட பயன்படுத்தி வந்ததாகவும், அதன் காரணத்தை அவர் சமீபத்தில் தான் அறிந்தார் எனவும் பதிவிட்டிருந்தார்

"இது என் அம்மாவின் தட்டு. இதில் தான் அவர் 20 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தார். என்னையும், எனது சகோதரியின் மகளையும் தவிர வேறு யாரையும் இதில் சாப்பிட அனுமதிக்கமாட்டார். அம்மா இறந்த பிறகு தான் அதன் காரணம் எனக்கு தெரிந்தது. நான் சிறுவயதில் போட்டியில் வென்ற போது இந்த தட்டு எனக்கு பரிசாக வழங்கப்பட்டது. எனது சகோதரி தான் இதனை எனக்கு கூறினார்" என்று அவர் பதிவிட்டிருந்தார்

"20 ஆண்டுகள், ஒரே தட்டு" - அம்மாவை குறித்த இளைஞரின் பதிவு இணையத்தில் வைரல்
இறந்த நபருக்கு இறுதி அஞ்சலியில் குரங்கு - கண்கலங்க வைக்கும் வீடியோ

விக்ரம் 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது அவர் இந்த தட்டை பரிசாக பெற்றுள்ளார். இந்த காரணத்தை அவர் தன்னிடம் கூறவில்லை என்றாலும், அவரது செயல் எவ்வளவு நெகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்று கூறிய விக்ரம், தனது தாயை மிஸ் செய்வதாக பதிவிட்டிருந்தார்.

விக்ரமின் இந்த பதிவுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேலாக பார்வைகளும், ஏகப்பட்ட லைக்குகள், கமென்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அம்மாவின் அன்பு எல்லைகள் அற்றது என்று சிலர் பதிவிட்டு, விக்ரமுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்

"20 ஆண்டுகள், ஒரே தட்டு" - அம்மாவை குறித்த இளைஞரின் பதிவு இணையத்தில் வைரல்
”சாகப்போறேன்னு அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்” நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com