”சாகப்போறேன்னு அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்” நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை

6 வயது சிறுவன் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், இன்னும் சில நாட்களில் தான் இறக்கவுள்ளதையும் பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டாம் என மருத்துவரிடம் எனக் கூறியுள்ளான்.
”அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்”  நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை - வைரல் ட்வீட்
”அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்” நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை - வைரல் ட்வீட்canva

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, தன் பெற்றொரிடம் கூறவேண்டாம் என 6 வயது சிறுவன் மருத்துவரிடம் கேட்டுக்கொண்டுள்ள விஷயம், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குழந்தையாக இருக்கும்போது, நமக்கு சிறு காயம் ஏற்பட்டாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஊரையே கூட்டிவிடுவோம்.

ஆனால், இங்கு ஒரு 6 வயது சிறுவன் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், இன்னும் சில நாட்களில் தான் இறக்கவுள்ளதையும் பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டாம் என மருத்துவரிடம் எனக் கூறியுள்ளான்.

அந்த சிறுவனுடனான சந்திப்பு குறித்து, ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அப்போலோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர், மருத்துவர் சுதீர் குமார். வழக்கம்போல நோயாளிகளை பார்த்து சிக்கிச்சைகள் அளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு 6 வயது சிறுவனின் பெற்றொர் வந்தனர் எனவும், அவர்கள் தன்னிடம் ஒரு கோரிக்கை வைத்ததாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

“அவர்கள் என்னிடம், வெளியில் எங்கள் மகன் மனு காத்திருக்கிறான். அவனுக்கு புற்று நோய் இருக்கிறது. நாங்கள் அதை அவனிடம் இன்னும் கூறவில்லை. நீங்கள் அவனுக்கு சிகிச்சையளிக்கவேண்டும், ஆனால், அவனிடம் இந்த விஷயத்தை மட்டும் கூறவேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

வலிப்பு சம்பந்தமான சிகிச்சைகளுக்காக சிறுவனின் புற்றுநோய் நிபுணர் அவனை, மருத்துவர் சுதீர் குமாரிடம் அனுப்பிவைத்திருந்தார்.

”அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்”  நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை - வைரல் ட்வீட்
ஆற்றில் அடித்து செல்லும் குட்டி யானையை காப்பாற்றும் தாய் - இணையத்தை நெகிழ வைத்த வீடியோ

பெற்றோரின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர் குழந்தையை காண காத்திருந்தார். அப்போது சக்கர நாற்காலியில் மனு உள்ளே வந்தான்.

”அவனது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அவன் நம்பிக்கையுடனும், புத்திசாலியாகவும் தோன்றினான்” என்று மருத்துவர் சுதீர் குமார் கூறினார்.

மனுவின் மெடிக்கல் ரெக்கார்ட்ஸை பார்த்த மருத்துவர் அந்த சிறுவனுக்கு glioblastoma multiforme grade 4 புற்றுநோய் இருப்பதை அறிந்தார். இதனால், சிறுவனின் இடது மூளை பாதிக்கப்பட்டு, வலது கை மற்றும் கால் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. மூளை புற்று நோய் காரணமாக அவனுக்கு வலிப்பும் இருந்துள்ளது.

சிறுவனுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கவேண்டும் என்பதை பெற்றொரிடம் கலந்துரையாடிய பின்னர் அவர்கள் புறப்படும் சமயத்தில், மனு மருத்துவரிடம் தனிமையில் பேசவேண்டும் எனக் கேட்டுள்ளான்.

பெற்றோர் அறையை விட்டு வெளியேறிய பின்னர் அவன் தன்னிடம், “எனது நோய் குறித்து இணையத்தில் படித்து தெரிந்துகொண்டேன். நான் இன்னும் 6 மாதக் காலம் தான் உயிருடன் இருப்பேன் என்பது எனக்கு தெரியும்,

ஆனால் நான் அம்மா அப்பாவிடம் கூறவில்லை. தெரிந்தால் அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னை அளவுகடந்து நேசிக்கின்றனர். இதை தயவு செய்து அவர்களிடம் கூறவேண்டாம்” எனக் கூறியுள்ளான்.

இதைக் கேட்டதும் சற்றே அதிர்ச்சியடைந்தார் மருத்துவர். ஆனால், மனுவின் கோரிக்கையை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

இது எவ்வளவு தீவிரமான பிரச்னை என்பதை சிறுவனின் குடும்பத்தார் அறிவது அவசியம் என்றும், அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச காலத்தை சந்தோஷமாக அவர்கள் செலவழிக்கவேண்டும் எனவும் தான் நினைத்ததாக அவர் கூறினார்.

”அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்”  நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை - வைரல் ட்வீட்
வாலுடன் பிறந்த குழந்தை; பெற்றோர் அதிர்ச்சி! மருத்துவர்கள் சொல்வதென்ன?

தங்கள் மகனுக்கு புற்று நோய் இருப்பது அவனுக்கு தெரியும் என்பதை அறிந்த பெற்றோர் கனத்த இதயத்துடன் நிலையில் விடைப்பெற்றுள்ளனர்.

அதன் பின்னர் மருத்துவர் சுதீரும் தனது அன்றாட வாழ்வை கவனிக்க தொடங்கிவிட்டார். 9 மாதங்களுக்கு பிறகு, சிறுவன் மனுவின் பெற்றோர் மருத்துவரை சந்திக்க வந்துள்ளனர்.

அப்போது அவர்கள்,

“நாங்கள் உங்களை சந்தித்துவிட்டு சென்றபிறகு மனுவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். அவன் டிஸ்னி லேண்டிற்கு செல்ல ஆசைப்பட்டான், சென்று வந்தோம். தற்காலிகமாக எங்கள் வேலையை விட்டுவிட்டு அவனுடன் நேரம் செலவிட்டோம்.

கடந்த மாதம் அவன் எங்களை விட்டு பிரிந்தான். எங்கள் வாழ்நாளின் சிறந்த 8 மாதங்கள் இது தான். அதை கொடுத்த உங்களுக்கு நன்றி தெரிவித்து போகலாம் என்று இங்கு வந்தோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சுதீர் பகிர்ந்திருந்த இந்த கதை இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது

”அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்”  நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை - வைரல் ட்வீட்
இறந்த நாய்காக பச்சை குத்தி அஞ்சலி செலுத்திய பெண் : இணையவாசிகளை நெகிழ வைத்த வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com