
தன் இறப்பு சான்றிதழை தொலைத்துவிட்டதாக ஒருவர் நாளிதழில் கொடுத்த விளம்பரம் இணையத்தை கவர்ந்துள்ளது.
தினமும் நாம் இன்டெர்னெட்டில் பல விசித்திரமான, வேடிக்கையான சம்பவங்களைக் கடந்து வருவோம். இங்கும் அப்படி ஒரு விஷயம் தான் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.
ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு ரஞ்சித் குமார் என்பவர் விளம்பரம் ஒன்றை அளித்திருந்தார். அந்த விளம்பரத்தில் "நான் எனது டெத் சர்ட்டிஃபிக்கேட்டை 7/09/22 அன்று காலை 10 மணிக்கு லம்டிங் பஜாரில் தொலைத்துவிட்டேன். Registration No: 93/18 SL No: 0068132" என்று விவரம் அளித்திருந்தார்.
இதை பார்த்த காவல் துறை அதிகாரி ருபின் சர்மா தன் டிவிட்டர் பக்கத்தில் "இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும்" என தலைப்பிட்டு டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த இணையவாசிகள், ஒரு வேளை அந்த நபர் சொர்க்கத்திலிருந்து உதவி கேட்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
ஒருவர், "ஒருவேளை சான்றிதழ் கிடைத்தால் அதை எங்கு கொண்டு சேர்க்கவேண்டும்? சொர்க்கத்திலா நரகத்திலா?" என்று கேட்டிருந்தார். இன்னொருவர், இந்த இறப்பு சான்றிதழ் கிடைத்தால் முதலில் அவருக்கு அதை கொண்டு சேர்த்துவிடுங்கள். இல்லையெனில் ஆவி கோபித்துக் கொள்ளும் என நகைச்சுவையாக கூறியிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust