உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக ரெக்கார்ட் - உண்மை வெளிவந்தது எப்படி?

தான் இறந்துவிட்டதாகத் தவறான பதிவுகள் இருந்த காரணத்தினால் தான் இத்தனை குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறைக்கு அவர் விளக்கமளித்த பின்னரே, தற்போது 18 மாதங்களுக்குச் சாலை வரி சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
Dead
DeadTwitter
Published on

காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றவர், இறந்துவிட்டதாக பதிவுகள் இருந்துள்ள சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் ஒருவர், தனது சொத்து பத்திரம் ஒன்று காணாமல் போனதால் புகாரளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பதிவேடுகளில் அவர் இறந்துவிட்டதாகக் குறிப்புகள் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த லோ சூ சூன் என்பவர், நிதி நெருக்கடியிலிருந்துள்ளார். இதன் காரணமாக அவரும் அவரது மனைவியும் இணைந்து வாங்கிய இடத்தை தனது உறவினருக்கு விற்க முடிவு செய்தபோது தான் அதன் பத்திரம் தொலைந்துவிட்டதை அவர் அறிந்தார்.

தொலைந்த பத்திரம் குறித்த புகாரை அளிக்க அவர் காவல் நிலையம் சென்றபோது தான் அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் பதிவாகியிருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது .

Dead
இறந்துவிட்டதாக அடக்கம் செய்த திருடன் - 9 மாதங்களுக்கு பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

இதுகுறித்து காவலர்களிடம் விசாரித்த போது அவர்கள் லோ வை தேசிய பதிவு துறையில் புகார் ஒன்றை அளிக்குமாறு கூறியுள்ளனர். அங்கு கிடைத்த தகவலின் படி லோ இறந்து 8 மாதங்கள் ஆகிறது.

இதனால் லோ இத்தனை நாட்களாக தனது பத்திரங்களை மீட்பது, புதுப்பிப்பது போன்ற செயல்கள் சற்று கடினமான காரியமாக இருந்துள்ளது.

மேலும், பல மாதங்களாக ஓட்டுநர் வேலைக்கு அவர் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவும் இல்லை, ஏன் என்பது குறித்த தகவல்களும் இல்லாததால் குழப்பத்திலிருந்துள்ளார் லோ. இதன் காரணமாகவே அவரால் தனது சாலை வரி சான்றிதழையும் புதுப்பிக்க முடியாமல் இருந்துள்ளது.

தான் இறந்துவிட்டதாகத் தவறான பதிவுகள் இருந்த காரணத்தினால் தான் இத்தனை குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறைக்கு அவர் விளக்கமளித்த பின்னரே, தற்போது 18 மாதங்களுக்குச் சாலை வரி சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

லோ, பல வருடங்களாக அமரர் ஊர்தி ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததார். ஆனால் தன் பெயரும் காலமானவர்களின் பட்டியலில் இடம்பெறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

Dead
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com