மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?

இந்த சம்பவத்துக்கு பிறகு மெட்ரோ நிர்வாகம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த பறக்கும்படையினரை அதிகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?
மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?Twitter

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளியான வீடியோ அதிர்ச்சியை கிளப்பியது. மெட்ரோ ரயிலில் அடையாளம் தெரியாத நபர் சுயஇன்பம் செய்யும் வீடியோதான் அது. டெல்லி காவல்துறையினர் அந்த நபர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

 இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி அந்த நபர் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.  அவர் மீது ஐபிசி பிரிவு 294ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைத் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு குறித்து, டெல்லி மகளிர் கமிஷன் காவல்துறைக்கும் மெட்ரோ நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“டெல்லி மெட்ரோவில் ஒரு நபர் வெக்கமின்றி சுய இன்பத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது. இது அருவருப்பானதும் வேதனைத்தருவதுமாக இருக்கிறது. இந்த இழிவான செயலுக்கு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டெல்லி காவல்துறை மற்றும் மெட்ரோ நிர்வாகத்துக்கு நோட்டீஸ்ன் அனுப்புகிறேன்” என மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கூறியிருந்தார்.

மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?
மெட்ரோவில் பாவாடையுடன் வலம் வந்த இளைஞர்கள் - எங்கே? பொதுமக்கள் ரியாக்‌ஷன் என்ன?

மெட்ரோ நிர்வாகம் இது குறித்து, “பயணிகள் மெட்ரோவில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். சக பயணிகள் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் போது DMRC ஹெல்ப்லைனில் புகாரளிக்க வேண்டும்.“ எனக் கூறியுள்ளது.

மேலும், மெட்ரோவில் கண்கானிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் விதமாக பறக்கும் படயினரை அதிகப்படுத்தவும் மெட்ரோ முடிவு செய்துள்ளதாகத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?
மெட்ரோவில் பிகினியுடன் பயணம் செய்த பெண் : வைரலான வீடியோ - என்ன சொல்கிறார் அவர்?

டெல்லி மெட்ரோவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் பிகினியுடன் மெட்ரோவில் பயணம் செய்தது பேச்சு பொருளானது. 

மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் பாலியல் காரியங்ககளில் ஈடுபடுவது குறித்து புகார்கள் எழுவது வழக்கமாகியிருக்கிறது.

தவிர மெட்ரோவில் நடனமாடி ரீஸ்ல் பதிவிடுவது சட்டவிரோதம் எனத் தெரிவித்த பின்னரும் அது போன்ற ரீல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com