ஆந்திரா : அமைச்சர் ரோஜா கார் மீது தாக்குதல்; டிரைவருக்கு தலையில் காயம் - என்ன நடந்தது?

அதே நேரத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தில் மூன்று நாள் ஜனவாணி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார்.
அமைச்சர் ரோஜா
அமைச்சர் ரோஜாTwitter

ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கும் முடிவிற்கு ஆதரவாக ரோஜா உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட பேரணி நேற்று நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு ரோஜா, ஜோகி ரமேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்தனர்.

அதே சமயத்தில் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தில் மூன்று நாள் ஜனவாணி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார்.

அவரை வரவேற்பதற்காக 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விமான நிலையத்தின் வெளியே கூடியிருந்த நிலையில் ரோஜா உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு அவர்களின் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அமைச்சர் ரோஜா
விஜயவாடாவில் குவிந்த போட்டோகிராபர்கள்: சாதனை படைத்த அமைச்சர் ரோஜா - அப்படி என்ன செய்தார்?

இதனால் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது . இதில் அமைச்சர் ரோஜாவின் ஓடுநர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்த காவல் துறையினர் அவர்களை தடுக்க முயற்சித்தனர்.

பின்னர் அமைச்சர்களின் மீதான தாக்குதல் தொடர்பாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைச்சர் ரோஜா
ஆந்திரா : ரோஜாவிடம் திருமணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்ட முதியவர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com