இந்தியாவில் ஜி20 மாநாடு: டெல்லியில் குரங்கு பதாகைகள் வைக்கும் அரசு - ஏன்?

சமீபமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எதிர்பாராத நேரத்தில் சாலைகளின் நடுவே ஓடி திரிவதும், பொது மக்களிடம் சீறுவதும், அவர்களை தாக்குவதுமான சம்பவங்கள் நடந்துவருகிறது.
இந்தியாவில் ஜி20 மாநாடு: டெல்லியில் குரங்கு பதாகைகள் வைக்கும் அரசு - ஏன்?
இந்தியாவில் ஜி20 மாநாடு: டெல்லியில் குரங்கு பதாகைகள் வைக்கும் அரசு - ஏன்?ட்விட்டர்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அரசு குரங்கு பதாகைகள் வைத்துள்ளது.

வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இந்த ஜி 20 உறுப்பு நாடுகளாகும்.

சமீபமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எதிர்பாராத நேரத்தில் சாலைகளின் நடுவே ஓடி திரிவதும், பொது மக்களிடம் சீறுவதும், அவர்களை தாக்குவதுமான சம்பவங்கள் நடந்துவருகிறது.

ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பகுதிகளிலும் இந்த குரங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதால், குரங்குகளால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நகரின் வனத்துறை இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்தியாவில் ஜி20 மாநாடு: டெல்லியில் குரங்கு பதாகைகள் வைக்கும் அரசு - ஏன்?
இறந்த தன் குட்டியை சாப்பிட்ட தாய் குரங்கு - அறிவியலாளர்கள் சொல்லும் காரணம் என்ன?

பல்வேறு வகை குரங்குகள் டெல்லியில் காணப்படுகிறது, அவற்றில் நீண்ட வாலுடைய லங்கூர் வகை குரங்குகள் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளிலும், இந்த லங்கூர் வகை குரங்குகளின் பதாகைகளை வைத்துள்ளனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.

"நாங்கள் அவற்றுக்கு தீங்கு செய்யவோ அல்லது அவற்றை (குரங்குகளை) அகற்றவோ முடியாது, அவற்றை வனப்பகுதிகளில் அடைத்து வைப்பதே எங்களுக்கு இருக்கும் ஒரே வழி" என்று புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறினார்.

இதை தவிர, குரங்குகளை போல சத்தமிடக்கூடிய 30-40 நபர்களை முக்கிய சாலைகளில் நிறுத்திவைத்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், அவற்றின் எல்லைகளை தாண்டி குரங்குகள் வரக்கூடாது என்பதற்காக உணவு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் ஜி20 மாநாடு: டெல்லியில் குரங்கு பதாகைகள் வைக்கும் அரசு - ஏன்?
டெல்லி மெட்ரோவில் காதலனை சரமாரியாக கன்னத்தில் அடித்த காதலி - இணையவாசிகள் காட்டம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com