ஆன்லைனில் விஸ்கி ஆர்டர் செய்த பெண்ணிடம் 5.35 லட்சம் மோசடி - என்ன நடந்தது?

அந்த பெண் தொடர்புகொண்ட ஒயின் ஷாப் ஊழியர்கள் அவரது வீட்டிற்கே விஸ்கி பாட்டிலை டெலிவரி செய்வதாகக் கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த கூறியுள்ளனர்.
Whiskey
WhiskeyCanva

ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க முயற்சித்த பெண் ஒருவர் 5.35 லட்சத்தை இழந்துள்ளார்.

இணையம் மூலம் நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது. குண்டு ஊசி முதல் காய்கறி வரை, இணையத்தில் கிடைக்காத விஷயங்களே இல்லை. இந்த பட்டியலில் மதுபானங்களும் அடங்கும்.

இப்படி இணையம் மூலம் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் பல நேரங்களில் மாறி வந்தடையும். செல்ஃபோன் ஆர்டர் செய்தால் செங்கல், துணி துவைக்கும் சோப் போன்றவை டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அல்லது, ஆன்லைன் ஷாப்பிங் ஆப் என பாசாங்கு செய்து நம்மிடமிருந்து பணம் பறிக்கப்படும்.

இங்கும் மும்பையை சேர்ந்த ஒரு பெண் இப்படி ஆன்லைன் முறைகேடு ஒன்றிற்கு ஆளாகியுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவர், ஆன்லைனில் விஸ்கி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த பெண் தான் செய்யும் கேக்கிற்காக விஸ்கி தேவைப்பட்டதால் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இவர் தொடர்புகொண்ட ஒயின் ஷாப்பின் நிர்வாகிகள் அவரது வீட்டிற்கே விஸ்கி பாட்டிலை டெலிவரி செய்வதாகக் கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த கூறியுள்ளனர்.

Whiskey
நாடு முழுவதும் குழாய் மூலம் மதுபானம் சப்ளை? வைரலான புகைப்படம் - PIB விளக்கம் | Fact Check

முதலில் QR கோடு மூலம் பணத்தைச் செலுத்த கூறிய நபர்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணிடம் அவரது டெபிட் கார்ட் லிமிட்டை அதிகரிக்க சொல்லி கூடுதல் பணத்தை திருடியுள்ளனர்.

ஆர்டர் செய்த விஸ்கி பாட்டிலுக்கு 550 ரூபாய் அந்த பெண் செலுத்திய பின்னர்,10 நிமிடத்தில் எங்களது டெலிவரி ஆட்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் வீட்டிற்கு வந்து மதுபானத்தை டெலிவரி செய்ய அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொருவரை தொடர்புகொள்ள சொல்லியிருக்கிறார். அப்படி தொடர்பு கொண்டவர் அந்த பெண்ணிடம் கூகுள் பே இல் 19, 051 என்ற எண்ணை பதிய கூறியுள்ளார். அந்த நம்பரை அவர் கூகுள் பே வில் போட்டவுடன் அவரது வங்கிகணக்கிலிருந்து 19,051 ரூபாய் டெபிட் ஆனது.

இதை அந்த அதிகாரியிடம் சொன்னபோது தொழில்நுட்ப கோளாறு என்று கூறி, அவர் முன்னர் மேற்கொண்ட அதே முறையை பின்பற்ற சொல்லி கூறியுள்ளார்.

மீண்டும் வங்கி கணக்கிலிருந்து 19,051 ரூபாய் குறைந்துள்ளது. மீண்டும் தொழில்நுட்ப கோளாறு தான் எனக் கூறி அந்த பெண்ணிடம் வங்கி கணக்கு குறித்த தகவல்கள், கார்டின் CVV எண் உள்பட அனைத்தையும் பெற்று ரூ.48,000 ரூபாய் ஒரு முறையும், ரூ. 96,000 ரூபாய் ஒரு முறையும் எடுத்துள்ளனர்.

மேலும் அவரை ₹95,051, ₹1,71,754 ரூபாயை அவர்களுக்கு செலுத்த சொல்லி அனைத்தையும் ஒரே முறையாக திருப்பி தருவதாக கூறி, 12 மணி நேரத்தில் மொத்தம் 5.35 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார் அந்த பெண்.

தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Whiskey
உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் ரூ.10 கோடிக்கு ஏலம் - அப்படி என்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com