முரளி விஜய்: "30 வயதுக்கு மேல் 80 போல நடத்துகின்றனர்"- வெளிநாட்டில் வாய்ப்பு தேடும் வீரர்

கடைசியாக அவர் 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். ஆனால் அப்போது அவர் சரியான ஃபார்மில் இல்லாததால் அதுன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
முரளி விஜய்: "30 வயதுக்கு மேல் 80 போல நடத்துகின்றனர்"- வெளிநாட்டில் வாய்ப்பு தேடும் வீரர்
முரளி விஜய்: "30 வயதுக்கு மேல் 80 போல நடத்துகின்றனர்"- வெளிநாட்டில் வாய்ப்பு தேடும் வீரர்Murali Vijay

2013,14 ஆண்டுகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக சதங்களை விளாசிய வீரர் முடளி விஜய்.

முன்னாள் கேப்டன், ரன் மிஷின் என புகழப்படும் விராட் கோலியே தடுமாறிய டெஸ்ட் போட்டிகளில் கூட முரளி விஜய் சதமடித்துள்ளார்.

ஆனால் இந்திய அணியின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரராகவே இருந்து வந்துள்ளார் முரளி விஜய்.

கடைசியாக அவர் 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். ஆனால் அப்போது அவர் சரியான ஃபார்மில் இல்லாததால் அதுன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2019ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் விளையாடினார்.

இப்போது 38 வயதாகும் முரளிவிஜய் பிசிசிஐ தாண்டி வாய்ப்புகளை தேடி வருவதாக கூறியுள்ளார்.

ஒரு வார நிகழ்ச்சியில் பேட்டி அளித்த அவர், "பிசிசிஐ உடன் எனது பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது வெளிநாடுகளில் வாய்ப்புகள் கிடைக்குமா எனத் தேடி வருகிறேன். நான் இன்னும் கிரிக்கெட் போட்டிகளிலே விளையாட விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

முரளி விஜய் 61 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 3928 ரன்கள் அடித்திருக்கிறார். 17 ஒருநாள் ஆட்டங்களில் 339 ரன்கள் அடித்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்களின் வயதை வைத்து மதிப்பிடுவதை கேள்விக்குட்படுத்துகிறார் முரளி விஜய்.

முரளி விஜய்: "30 வயதுக்கு மேல் 80 போல நடத்துகின்றனர்"- வெளிநாட்டில் வாய்ப்பு தேடும் வீரர்
T20WC: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் - என்ன நடந்தது?

"30 வயதுக்கு மேல் இந்தியாவில் விளையாடுவது வினோதமாக பார்கப்படுகிறது. 80 வயது முதியவர்களைப் பொல நடத்துகின்றனர். நீங்கள் 30களில் தான் உச்சத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஊடகங்கள் இதனை வேறுவிதமாக அணுக வேண்டும்.

இப்போது தான் என்னால் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால் வெளிநாடுகளில் தேட வேண்டிய நிலை உள்ளது" என அவர் பேசியுள்ளார்.

முரளி விஜய்: "30 வயதுக்கு மேல் 80 போல நடத்துகின்றனர்"- வெளிநாட்டில் வாய்ப்பு தேடும் வீரர்
Rishab Pant: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்து - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com