ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?
ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?twitter

ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், ஐந்து ஆண்டுகள் முன்னர் தான் இப்போது இருக்கும் இடத்திற்கு இடம்மாற்றப்பட்டது.

இந்தியா கோவில்கள் நிறைந்த நிலம். அதே போல இங்கு பல கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் பல விதமான பழக்கவழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகளை நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம்.

இந்தியாவில் ஒரு ஒரு கோவிலுக்கும் தனித்துவமான சிறப்பம்சம் ஒன்று இருக்கும். அது போல தான் ஒடிசாவில் இருக்கும் மா பஞ்சுபராகி கோவிலுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. இந்த கோவிலின் அர்ச்சகர்கள் திருமணமான தலித் பெண்கள்.

இந்த மா பஞ்சுபராகி கோவில், ஒடிசாவின் கேந்த்ரபாரா என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் அர்ச்சகர்கள் அனைவருமே பெண்கள். இங்குள்ள தெய்வங்களை தீண்டுவதற்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை. இந்த பெண் அர்ச்சகர்களுக்கு வாரம் தோறும் செவ்வாய் கிழமை அன்று கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாளில் கோவிலும் பூட்டப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த விடுமுறை நாளன்று நெய்விளக்கு ஏற்றப்படுகிறது. நெய்விளக்கு கோவில் மூடப்பட்டிருக்கும் அந்த 24 மணி நேரம் விளக்கு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும் என்பது இவர்களது ஐதீகம். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் மீனவ சமூகத்தினை சேர்ந்தவர்கள் தான்.

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், ஐந்து ஆண்டுகள் முன்னர் தான் இப்போது இருக்கும் இடத்திற்கு இடம்மாற்றப்பட்டது.

முதலில் இந்த கோவில் சத்யபயா என்ற கிராமத்தில் இருந்தது. அங்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்த கோவிலும், அங்குள்ள மக்களும் பாகபதியா என்கிற மறுவாழ்வு காலனியில் வசித்துவருகின்றனர். சுமார் 571 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

இந்த சத்யபயா கிராமத்தை அடைவதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்த கடற்கரை கிராமத்தினை சென்றடைய, ஆபத்தான முதலைகள் நிறைந்த பௌசகாடி நதியை கடக்கவேண்டும்.

அதன் பிறகு சுமார் 12 கிலோமீட்டர் டிரெக்கிங் செய்து சென்று தான் மா பஞ்சுபராகி கோவிலை அடையலாம். இதனால் இந்த கோவிலுக்கு குறைவான எண்ணிகையிலேயே மக்கள் வரத்து இருந்தது.

ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?
தண்ணீருக்கு நடுவில் ஒற்றை தூணில் நிற்கும் சிவன் கோவில் - பின்னணி என்ன?

இங்கு பூஜைகள் செய்யும் பெண் அர்ச்சகர்களுக்கு செவ்வாய் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது அல்லவா?

அதற்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, அந்த பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கூறியதாவது, “பணிக்கு செல்லும் அனைவருக்கும் அலுவலகங்கள் ஒரு நாள் விடுமுறை அளிக்கிறது. இந்த பெண்களுக்கும் இந்த கோவில் பணியிடம் தான். ஆகையால் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்றார்

”இந்த செவ்வாய் கிழமைகளில் நாங்கள் விரதம் இருக்கிறோம்” என்கிறார் கோவில் அர்ச்சக பெண்களில் ஒருவர்.

இங்கு ஆண்கள் கருவறைக்குள் செல்ல, பூஜைகள் செய்ய அனுமதியில்லை. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு பணியில் இருந்த அர்ச்சகர் ஒருவர் மது போதையில், கோவில் சிலைகளை சேதப்படுத்தியுள்ளார். இதனால் அப்போது இருந்து இங்கு ஆண்கள் அர்ச்சகர்களாக அனுமதிக்கப்படுவதில்லை என்கிறது பின்கதை. அதே போல இங்கு பூஜிக்கும் தலித் இன பெண்களை எதிர்ப்பவர்களும் யாரும் இல்லை. பக்தர்கள், ஊர்மக்கள் இவர்களை கண்ணியத்துடன் நடத்துவதாக கூறுகின்றனர்.

கோவிலின் கட்டமைப்பு, சாலைகள், மின்விளக்குகள் அமைத்து இவ்விடத்தை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என அந்த பகுதியின் சார் ஆட்சியர் நிரஞ்சன் பெஹெரா தெரிவித்துள்ளார்

ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?
அக்ஷர்தாம் : இந்தியாவுக்கு வெளியில் மிகப்பெரிய இந்து கோவில் - எப்போது திறக்கப்படும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com