அக்ஷர்தாம் : இந்தியாவுக்கு வெளியில் மிகப்பெரிய இந்து கோவில் - எப்போது திறக்கப்படும்?

அக்ஷர்தாம் வடிவமைப்பைப் பொறுத்தவரையில் ஒரு தனித்துவமான இந்துக் கோவிலாக திகழ்கிறது. ஒரு முக்கிய கோவில் 12 துணைக் கோவில்கள், 9 கோபுரம் போன்ற அமைப்புகள், 9 பிரமிடு போன்ற கோபுரங்கள் இருக்கின்றன.
அக்ஷர்தாம் : இந்தியாவுக்கு வெளியில் மிகப்பெரிய இந்து கோவில் - எப்போது திறக்கப்படும்?
அக்ஷர்தாம் : இந்தியாவுக்கு வெளியில் மிகப்பெரிய இந்து கோவில் - எப்போது திறக்கப்படும்?Twitter

BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி டவுன்ஷிப்பில் உள்ளது. தெற்கு நியூயார்க் டைம் ஸ்குயரில் இருந்து 90 கிலோமீட்டரிலும் வாஷிங்டன் டிசியில் இருந்து 289 கிலோ மீட்டரிலும் இந்த இடத்தை அடையாளம் காணலாம்.

இந்த கோவிலை கட்ட 12 ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து 12,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உழைத்துள்ளனர். இந்த கோவில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து ஆன்மிகத் தலைவரான பகவான் சுவாமி நாராயணுக்காக கட்டப்படுகிறது.

அக்ஷர்தாம் கோவில் 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்தியாவுக்கு வெளியில் உள்ள இரண்டாவது பெரிய கோவிலாகும். கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் 500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷர்தாம் கோவில் முறையாக அக்டோபர் 8ம் தேதி தான் திறக்கப்பட உள்ளது என்றாலும், இப்போதே அமெரிக்கா முழுவதிலும் இருந்து இந்துமக்களும் பிற இந்தியர்களும் ஆர்வமாக இங்கு வந்து செல்கின்றனர்.

அக்டோபர் 8ம் தேதி சுவாமி மஹ்ராஜ் என்பவர் இந்த கோவிலைத் திறந்து வைக்கிறார். 18ம் தேதிமுதல் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த கோவிலைப் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா இந்த கோவிலை முன்னின்று எழுப்பி வருகிறார். இந்தக் கோவில் இந்துக்களுக்கு, இந்தியர்களுக்கு அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமுகத்துக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்குமான இடமாக இருக்கும் எனக் கூறியிருக்கின்றனர்.

அக்ஷர்தாம் : இந்தியாவுக்கு வெளியில் மிகப்பெரிய இந்து கோவில் - எப்போது திறக்கப்படும்?
தாய்லாந்து: 15 லட்சம் பீர் பாட்டில்களால் உருவான கோவில் - ஒரு சுவாரஸ்ய கதை!

அக்ஷர்தாம் வடிவமைப்பைப் பொறுத்தவரையில் ஒரு தனித்துவமான இந்துக் கோவிலாக திகழ்கிறது. ஒரு முக்கிய கோவில் 12 துணைக் கோவில்கள், 9 கோபுரம் போன்ற அமைப்புகள், 9 பிரமிடு போன்ற கோபுரங்கள் இருக்கின்றன.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் வகையில் இதனை கட்டிஎழுப்புகின்றனர். சுண்ணாம்புக்கல், இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரானைட் என 4 வகைக் கற்களைப் பயன்படுத்திக் கட்டியுள்ளனர். இதனால் குளிரையும் வெப்பத்தையும் தாங்கும்.

அக்ஷர்தாம் : இந்தியாவுக்கு வெளியில் மிகப்பெரிய இந்து கோவில் - எப்போது திறக்கப்படும்?
கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com