"நான் பணியாற்றிய கட்சிகள் நல்லாட்சி கொடுப்பதாக கூறமுடியவில்லை" - பிரசாந்த் கிஷோர் கருத்து

ஆறு முதல்வர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவிய பிறகும் நல்லாட்சி இருப்பதாக என்னால் கூறமுடியவில்லை. அதனால் களத்தை விட்டு வெளியேறினேன் என்றார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் Twitter
Published on

காங்கிரஸ் தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தேர்தல் நடைபெறும் குஜராத்திலோ அல்லது வேறு ஏதேனும் பாஜக ஆளும் மாநிலத்திலோ தொடங்கியிருக்க வேண்டும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், 'ஐ-பேக்' என்ற நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் பல்வேறு வியூகங்களைக் வகுத்து வருகிறார்.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை வெற்றி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிருகிறார்.

காங்கிரஸுக்கு அரசியல் யோசனை

இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து வெளியேறினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினார். முன்னதாக காங்கிரஸில் சேருவது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிஷோர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விதர்பா தனி மாநில ஆதரவாளர்கள் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.

பின்னர் பேசிய அவர், ராகுல்காந்தியின் பாதயாத்திரை பற்றி கருத்து தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் Vs மம்தா பானர்ஜி: ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் - Morning News Wrap

நல்லாட்சி இல்லை

அதில் "இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்திலிருந்து அல்லது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து காங்கிரஸ் தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.

மேலும் பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்றத் திட்டமிட்டுள்ளேன் என்றார். ஆறு முதல்வர்களின் தேர்தல் வெற்றிக்கு உதவிய பிறகும் நல்லாட்சி இருப்பதாக என்னால் கூறமுடியவில்லை. அதனால் களத்தை விட்டு வெளியேறினேன் என்றார். எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் இனி நான் பணியாற்ற மாட்டேன் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

பிரசாந்த் கிஷோர்
உமா ஆனந்தன் : சொன்னதை செய்த அண்ணாமலை - திமுக கோட்டையில் ஓட்டைப் போட்ட பாஜக

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com