முகமது நபிகள் விவகாரம் - நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி டெல்லியில் வலுக்கும் போராட்டங்கள்

வெள்ளிக்கிழமை அன்று டெல்லியின் ஜமா மஸ்ஜித் முன் கூடிய மக்கள் அல்லாஹு அக்பர் என்று முழக்கங்கள் எழுப்பியபடி, நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் -யை கைது செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்.
ஜமா மஸ்ஜித்
ஜமா மஸ்ஜித்twitter
Published on

பாஜக நிர்வாகிகளான நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபிகள் குறித்துப் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அரபு நாடுகளின் எதிர்ப்பை பெற்று வந்தது. இந்நிலையில், இந்தியாவில் டெல்லி, ராஞ்சி, அலகாபாத் பகுதிகளில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நுபுர் சர்மா, ஜிண்டால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக அறிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை அன்று டெல்லியின் ஜமா மஸ்ஜித் முன் கூடிய மக்கள் "அல்லாஹு அக்பர்" என்று முழக்கங்கள் எழுப்பியபடி, நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் ஐ கைது செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்

ஜமா மஸ்ஜித்
ஜமா மஸ்ஜித்twitter

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருந்தார்.

அரபு நாடுகள் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பை தெரிவித்து தங்கள் மதத்தலைவரை பற்றிய அவதூறு கருத்துகளுக்கு இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தின. நுபுர் சர்மாவின் கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததற்காக பாஜகவின் முன்னாள் ஊடகத் தலைவர் நவீன்குமார் ஜிண்டாலையும் கட்சி இடைநீக்கம் செய்தது.

ஜமா மஸ்ஜித்
ஜமா மஸ்ஜித்twitter
ஜமா மஸ்ஜித்
முகமது நபிகள் சர்ச்சை: பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா - யார் இவர்?

ஜிண்டால் மற்றும் நூபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய போராட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கலைந்து சென்றனர். டெல்லியைத் தவிர, உத்திர பிரதேசம், ராஞ்சி, அலகாபாத் ஆகிய இடங்களிலும் இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் போராட்டங்களை நடத்தினர்.

பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடிக்க, பிரயாக்ராஜ் பகுதியில் போராட்டக்காரர்கள் திடீரென கற்களை வீசியதால், காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பிரச்னை மூண்டது.

Nupur Sharma
Nupur SharmaTwitter

சஹரான்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ராஞ்சியில் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போது போலீசார் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதை தவிர கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளிலும் நுபுர் சர்மா மற்றும் ஜிண்டாலை கைது செய்ய கோரி போராட்டங்கள் வெடித்துள்ளது.

நுபுர் சர்மா மற்றும் ஜிண்டால் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Naveen Kumar Jindal
Naveen Kumar JindalTwitter
ஜமா மஸ்ஜித்
முகமது நபிகள் | இந்தியா Vs அரபு உலகம்: என்ன நடக்கிறது? அ முதல் ஃ வரை - முழுமையான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com