இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!

ஜக்ஜித் தனது பாட்டியையே தாய் போல நினைத்து அவரது அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பாட்டியும் இறந்து விட்டபின் அவரது குடும்ப புகைப்படத்தைப் பார்த்து தாத்தா சில மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை ஜக்ஜித்திடம் கூறியுள்ளார்.
இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!
இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!Twitter

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜக்ஜித் சிங். இவர் இறந்துவிட்டதாக நினைத்திருந்த தனது தாயை 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு சந்தித்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாட்டியால் வளர்க்கப்பட்ட இவர் தனது தாயை சந்தித்தபோது அழுகையையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினார். அம்மாவை ஆரத்தழுவும் வீடியோ இணையத்தில் வைரலானது.

ஜக்ஜித் சிங் தன்னார்வ அமைப்பில் இணைந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். பாட்டியாலாவில் உள்ள மக்களுக்கு உதவ அண்மையில் அங்கு சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கையில் நம்ப முடியாத திருப்பங்கள் இங்குதான் நடைபெற்றன.

ஜக்ஜித் சிங்கிடம் சிறுவயதில் இருந்தே அவரது தாயும் தந்தையும் இறந்துவிட்டதாகக் கூறி வளர்த்துள்ளனர். தாத்தா காவல்துறையில் பணியாற்றியதால் ஹரியானாவில் வளர்ந்தார். தாத்தா பணி ஓய்வு பெற்ற பிறகு குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு திரும்பியுள்ளனர்.

உறவினர்கள் அனைவரும் ஜக்ஜித்தின் தாய் இறந்துவிட்டதாகவேக் கூறியிருக்கின்றனர். ஜக்ஜித் தனது பாட்டியையே தாய் போல நினைத்து அவரது அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.

ஜக்ஜித்தின் பாட்டியும் இறந்து விட்டபின் அவரது குடும்ப புகைப்படத்தைப் பார்த்து தாத்தா சில மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை ஜக்ஜித்திடம் கூறியுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜக்ஜித்தின் தாத்தாவும் இறந்த பிறகு அவரது அம்மா உயிருடம் இருப்பது குறித்து தெரியவந்துள்ளது.

பாட்டியாலா பயணத்தின் போது அவரது நெருங்கிய உறவினரை சந்தித்துள்ளார் ஜக்ஜித் சிங். அவர் மூலமாக தாய்வழி தாத்தா - பாட்டி போஹர்பூர் என்ற கிராமத்தில் வசிப்பதைத் தெரிந்துகொண்டார்.

தாத்தா பாட்டியிடம் சென்று தன்னைப் பற்றி அதிகம் தெரிவிக்காமல் அம்மா குறித்து விசாரித்துள்ளார் ஜக்ஜித் சிங்.

இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!
இறந்துவிட்டதாக எண்ணிய தாய் : 17 ஆண்டுகள் கழித்து மகனை கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்


அவரது தந்தை விபத்தில் இறந்ததையும் தாய் உயிருடன் இருப்பதையும் தாத்தா உறுதிசெய்துள்ளார். சோனு என்ற தனது பேரன் குறித்து தாத்தா கூறும்போது அது தான்தான் என்று கூறி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஜக்ஜித் சிங்.

அதற்கு அடுத்த நாள் அம்மாவைப் பார்க்கத் தயாரானார் ஜக்ஜித். அந்த இரவு அவரது வாழ்க்கையிலேயே மிக நீண்ட இரவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!
குழந்தைக்கு ரத்தம் கொடுக்க மும்பையில் இருந்து வியட்நாம் சென்ற இருவர்- நெகிழ்ந்த குடும்பம்!

35 ஆண்டுகள் இறந்துவிட்டார் என நினைத்திருந்த தாயை நேரில் சந்தித்துள்ளார். வார்த்தைகள் வராமல் அழுதுள்ளனர். பின்னர் இருவரும் நிறைய பேசியுள்ளனர்.

தனது தாய் எதற்காக தன்னை 35 ஆண்டுகள் பிரிந்திருந்தார் என்பது பற்றி எதுவும் கேட்கவில்லை என ஜக்ஜித் சிங் கூறியுள்ளார்.

இறந்துவிட்டதாக நினைத்த அம்மாவை 35 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன் - ஒரு நெகிழ்ச்சி கதை!
மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்; மனைவிக்கு கொடுத்த பரிசு! ஒரு நெகிழ்ச்சி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com