குழந்தைக்கு ரத்தம் கொடுக்க மும்பையில் இருந்து வியட்நாம் சென்ற இருவர்- நெகிழ்ந்த குடும்பம்!

இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக ஆசிரியர் பிரவீன் ஷிண்டே, என்ஜினீயர் ஆஷிஸ் ஆகியோர் 'பாம்பே' ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
குழந்தைக்கு ரத்தம் கொடுக்க மும்பையில் இருந்து வியட்நாம் சென்ற இருவர்
குழந்தைக்கு ரத்தம் கொடுக்க மும்பையில் இருந்து வியட்நாம் சென்ற இருவர்Twitter
Published on

பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை காப்பாற்ற 2 இளைஞர்கள் ரத்த தானம் செய்ய மும்பையில் இருந்து வியட்நாம் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சோ்ந்த ஆசிரியர் பிரவீன் ஷிண்டே, என்ஜினீயர் ஆஷிஸ் ஆகியோர் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள். இவர்கள் இருவரும் பாம்பே என்ற அரிதான ரத்த வகையை சேர்ந்தவர்கள்.

வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் உள்ள மருத்துவமனையில் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சிகிச்சை பெற்று வந்தது.

newborn baby
newborn babyTwitter

திடீரென குழந்தைக்கு உடல்நிலை மோசமானது. குழந்தையை காப்பாற்ற அரிய 'பாம்பே' வகை ரத்தம் தேவைப்பட்டது.

இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக ஆசிரியர் பிரவீன் ஷிண்டே, என்ஜினீயர் ஆஷிஸ் ஆகியோர் பாம்பே ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தெரிவிக்கப்பட்ட உடனே இருவரும் வியட்நாம் நாட்டிக்கு சென்று ரத்த தானம் செய்ய முன் வந்தனர்.

குழந்தைக்கு ரத்தம் கொடுக்க மும்பையில் இருந்து வியட்நாம் சென்ற இருவர்
உயரமாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நபர் : 1.2 கோடி செலவில் சிகிச்சை - எங்கே?

வியட்நாம் இந்திய தூதரகம், தன்னார்வ அமைப்பினர் உடனடியாக அவர்கல் இருவரையும் வியட்நாம் அழைத்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தனர்.

இதனால் 24 மணி நேரத்தில் பிரவீன் ஷிண்டே, ஆஷிஸ் வியட்நாம் சென்றனர்.

ஆனால் ரத்தம் உடனடியாக தேவைப்பட்டதால் உள்ளூர்வாசி ஒருவரிடம் இருந்து பெற்று மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

அவர்களின் ரத்தத்தை குழந்தைக்கு செலுத்த முடியாமல் போனது, அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

ரத்தம் செலுத்த முடியாமல் போனாலும், குழந்தையை காப்பாற்ற மும்பையில் இருந்து வியட்நாம் வரை சென்ற ஆசிரியர் பிரவீன் ஷிண்டே, என்ஜினீயர் ஆஷிசின் செயல் குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பாம்பே ரத்தம் என்றால் என்ன?

'பாம்பே' என்கிற ரத்த வகை குறித்து மக்கள் அறிந்திருப்பது குறைவுதான். பாம்பே ரத்த வகையை, 'ஓஎச் பாசிட்டிவ்' என்று குறிப்பிடுகிறார்கள்.

குழந்தைக்கு ரத்தம் கொடுக்க மும்பையில் இருந்து வியட்நாம் சென்ற இருவர்
பல சாம்ராஜ்ஜியங்களை வீழ்த்திய ரத்தம் குடிக்கும் நாடோடி வீரர்கள் - சிதியர்கள் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com