Manipur: கலவரத்துக்கு பின்னால் இருப்பவர் யார்? RSS தலைவர் சர்ச்சை பேச்சு!

"ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் மணிப்பூரில் இருந்தார். யார் இந்த பிரச்னைக்கு எண்ணெய் ஊற்றியது? இது (கலவரம்) தானாக நடைபெறவில்லை, நடத்தப்பட்டிருக்கிறது"
Manipur: கலவரத்துக்கு பின்னால் இருப்பவர் யார்? RSS தலைவர் சர்ச்சை பேச்சு!
Manipur: கலவரத்துக்கு பின்னால் இருப்பவர் யார்? RSS தலைவர் சர்ச்சை பேச்சு!Twitter
Published on

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மணிப்பூர் நிலவரம் குறித்து பேசியுள்ளார். மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் திட்டமிடப்பட்டவை எனக் கூறிய அவர், இதற்கு வெளிப்புற சக்திகளே காரணம் என்றும் கூறியுள்ளார்.

மணிப்பூரில் குக்கி மக்களும் மெய்திக்களும் நீண்ட காலமாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். அது ஒரு எல்லை மாநிலம். இது மாதிரியான பிரிவினைவாத சர்வதேச பிரச்னை நாட்டுக்கு வெளியில் இருக்கும் சக்திகளுக்கு சாதகமானதாக இருக்கும். அப்படி வெளிப்புற நபர்கள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தசரா அணிவகுப்பில் பேசிய அவர், கலாச்சார மார்க்சிஸ்டுகள் மற்றும் பிற சக்திகள் மீடியாவிலும் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தி நாட்டின் கல்வியையும் கலாச்சாரத்தையும் சீர்குலைக்கின்றனர் என்று அவர் பேசினார்.

மேலும் அயோத்தியா இராமர் கோவிலில் விக்ரஹம் வைக்கப்படும் ஜனவரி 22ம் தேதி நாடுமுழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

MANIPUR WOMEN
MANIPUR WOMENtwitter

மணிப்பூர் குறித்து, "ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாட்கள் மணிப்பூரில் இருந்தார். யார் இந்த பிரச்னைக்கு எண்ணெய் ஊற்றியது? இது (கலவரம்) தானாக நடைபெறவில்லை, நடத்தப்பட்டிருக்கிறது" என்றார்.

"எந்த வெளிநாடு மணிப்பூரின் அமைதியற்ற தன்மையை சாதகமாக்கிக்கொள்ள முடியும்? தென்கிழக்கு ஆசியாவின் அரசியலுக்கு இதில் பங்கு இருக்கிறதா?" எனவும் கேள்வி எழுப்பினார்.

Manipur: கலவரத்துக்கு பின்னால் இருப்பவர் யார்? RSS தலைவர் சர்ச்சை பேச்சு!
வரலாற்றில் RSS அமைப்பு சந்தித்த தடைகள் : ஒரு வரலாற்று பார்வை

அமைதி மீண்டும் திரும்பும் போது சில நிகழ்வுகள் நடக்கின்றன. இது மீண்டும் இரண்டு சமுகங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகமாக்குகிறது. இதற்கு பின்னால் இருந்து வன்முறையை தூண்டுவது யார்? எனக் கேள்வி எழுப்பியவர், சங்க பணியாளர்கள் மணிப்பூரில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட உழைத்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர், 2024 தேர்தலில் ஒற்றுமை, நேர்மை, அடையாளம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் பேசினார்.

Manipur: கலவரத்துக்கு பின்னால் இருப்பவர் யார்? RSS தலைவர் சர்ச்சை பேச்சு!
ராஜீவ்காந்தி நேர்காணல்: "UCC சட்டம் RSS அஜெண்டா" பாஜகவை விளாசும் திமுக மாணவரணி தலைவர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com