அந்தமான் நிக்கோபார் தீவுகள்: 24 மணி நேரத்தில் 22 நிலநடுக்கங்கள் - என்ன நடக்கிறது அங்கு?

கடந்த திங்கட்கிழமை அந்தமான் கடலில் காலை 5.42 மணி அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்படத் தொடங்கியது. கடைசியாக ஜூலை 6ஆம் தேதி புதன்கிழமை காலை 8.05 மணிக்கு போர்ட் பிளேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்Canva
Published on

இயற்கைப் பேரிடரில் மிகக் கொடிய ஒன்று நிலநடுக்கம். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் மிகப் பெரிதாக இருக்கும். அதே நிலநடுக்கம் கடலுக்கடியில் ஏற்பட்டால் சுனாமி ஏற்பட்டு இன்னும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் தென் மேற்குப் பகுதியில் இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து பல நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை அந்தமான் கடலில் காலை 5.42 மணி அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்படத் தொடங்கியது. கடைசியாக ஜூலை 6ஆம் தேதி புதன்கிழமை காலை 8.05 மணிக்கு போர்ட் பிளேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் சுமார் 3.8 முதல் 5.0 ரிக்டர் அளவில் மட்டுமே ஏற்பட்டது. இதனால் உயிர் பலியோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்படவில்லை என்பது மிகவும் ஆறுதலான விஷயம். நல்லவேளையாக கடலுக்கடியில் பெரிய நிலநடுக்கங்கள் ஏதும் ஏற்பட்டு சுனாமி உருவாகவில்லை என்றும் பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

ஆனால் இப்படித் தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதி மற்றும் இந்தியாவில் உள்ள பல தரப்பு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நில நடுக்கம் குறித்து, நில அதிர்வுக்கான தேசிய மையம் (நேஷனல் சென்டர் ஃபார் செஸ்மாலஜி) தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.

சமீபத்தில் அசாம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரக் காலத்துக்குள் கர்நாடக மாநிலத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் தக்‌ஷின கன்னடா என்கிற மாவட்டத்தில் 2.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.

இது போன்ற நிலநடுக்கங்கள் கர்நாடக மாநிலத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கர்நாடகா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

பூகம்பம் எப்படி ஏற்படுகிறது?

பூமியில் பல டெக்டானிக் பிளேட்டுகள் (கண்டத் தகடுகள்) நகர்ந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் தகடுகளின் முனைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். அப்படி மோதிக் கொண்ட தகடுகளின் உராய்வைக் கடந்து அழுத்தம் வெளிப்படும் போது நில நடுக்கம் ஏற்படுகிறது. இது ஒட்டுமொத்த நிலப்பரப்பிலும் எதிரொலிக்கும். அந்த அழுத்தம் மற்றும் உராய்வின் தாக்கத்தைத் தான் நாம் நில அதிர்வுகளாக உணர்கிறோம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

இதே போன்ற நிலநடுக்கம் கடலுக்கடியில் நடந்தால் அதை சப்மரைன் எர்த்குவேக் என்கிறார்கள். இது போன்ற நில நடுக்கங்கள் பலமாக ஏற்பட்டால் நிலப்பரப்பில் சுனாமி ஏற்படும்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது நல்லதல்ல எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் நிபுணர்கள் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே நிலநடுக்கங்கள் சற்றே பலமாக ஏற்பட்டால் மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சுனாமி : ஜப்பான் முதல் இந்தோனேசியா வரை - உலகின் வரைபடத்தை மாற்றிய மோசமான 8 சுனாமிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com