சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

உலக நாகரீகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர் இந்த மக்கள். அந்தமானை சுற்றியுள்ள மற்ற பழங்குடின மக்களால் கூட இவர்களைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் எல்லாமும் புதிர் தான். இந்த தீவில் அடியெடுத்து வைத்து உயிருடன் திரும்பியவர்கள் மிகக் குறைவு.
சென்டினல் தீவு
சென்டினல் தீவுNewsSense

வடக்கு சென்டினல் தீவு அந்தமான் தீவுகளில் ஒன்றாகும். இது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு இந்தியத் தீவுக் கூட்டமாகும். இதில் தெற்கு சென்டினல் தீவும் அடங்கும். வடக்கு சென்டினல் தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரான சென்டினலீஸ்கள் வெளி உலகோடு தொடர்பில்லாமல் வாழ்கின்றனர். இங்கே யாரும் செல்லக் கூடாது என்று இந்திய அரசு பாதுகாத்து வருகிறது.

அந்தமான் தீவுக் கூட்டங்களில் ஒன்றான தனிமைப்படுத்தப்பட்ட வடக்கு சென்டினல் தீவுக்குச் சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஒருவர் 2018 இல்மரணமடைந்தார். இந்த மரணம் இந்தச் சிறிய தீவில் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் மீது உலகின் கவனத்தை ஈர்த்தது.

பூமியில் நாகரீக உலகோடு தொடர்பில்லாமல் வாழும் பழங்குடி மக்களில் வடக்கு சென்டினல் குழுவும் ஒன்று. இந்த தொடர்பின்மைக்கு புவியியல் காரணங்களும் உண்டு. இந்த சிறிய தீவு முக்கியமான கப்பல் வழித்தடங்களுக்கு அப்பால் உள்ளது. மேலும் ஆழமற்ற பாறைகளால் சூழப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அரசு இந்தத் தீவினை பாதுகாப்பு பிரதேசமாக வரையறுத்திருக்கிறது. இதன் மூலம் இந்த மக்களின் தனித்துவம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது. அதே நேரம் கடந்த 200 ஆண்டுகளில் இத்தீவிற்கு வெளியாட்கள் சென்றிருந்தாலும், சந்திப்பு மோசமாகவே இருந்தது.

அந்தமான் கடற்கரை
அந்தமான் கடற்கரைTwitter

சென்டினலிஸ் மக்கள் என்பவர்கள் யார்?

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படியும், இந்த தீவில் எத்தனை பேர் வாழ முடியுமென்ற மானுடவியலாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையிலும், வடக்கு சென்டினல் தீவில் 80 முதல் 150 பேர் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதே நேரம் இந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 500 முதல் குறைந்த பட்சமாக 15 வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

NewsSense

இந்தியாவின் வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் உள்ள பிற பழங்குடியினருடன் சென்டினலீஸ் மக்கள் மானுடவியல் ரீதியாகத் தொடர்புடையவர்கள். என்றாலும் ஓங்கே மற்றும் ஜாரவா போன்ற பிற அந்தமான் பழங்குடி குழுக்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்கள் நீண்ட காலமாகத் தனித்து வாழ்கின்றனர். இவர்களது மொழியை யாரும் புரிந்து கொள்ள முடியாது.

தீவு இருக்கும் இடம்
தீவு இருக்கும் இடம்Twitter

1967 இல் சென்டினலிஸ் கிராமத்திற்கு ஒரு முறை சென்றதன் அடிப்படையில், அவர்கள் சாய்ந்த கூரையுடன் கூடிய சிறிய குடிசைகளில் வாழ்கிறார்கள் என்பதை பண்டிட் தலைமையிலான குழு தெரிவித்தது. குடிசை முற்றத்தில் நெருப்புடன் இந்தக் குடிசைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கும் வண்ணம் கட்டப்பட்டிருந்தது. சென்டினலிஸ் மக்கள் தட்டையான மரத்துப்பை இயக்கி செலுத்தக்கூடிய கனமற்ற சிறிய படகுகளைப் பயன்படுத்துகிறார்கள். அந்த படகுகளிலிருந்து மீன்கள் மற்றும் நண்டுகளைப் பிடிக்கிறார்கள்.

பொதுவில் அவர்கள் வேட்டையாடுபவர்கள் எனலாம். அவர்களின் வாழ்க்கை முறை அந்தமானின் பிற மக்களைப் போன்றது என்றாலும், அவர்கள் தீவில் வளரும் பழங்கள் மற்றும் கிழங்குகள், கடற்பாசிகள் அல்லது ஆமைகளின் முட்டைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் அல்லது பறவைகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றனர்.

அவர்கள் வில் மற்றும் அம்புகள், ஈட்டிகள் மற்றும் கத்திகளை எடுத்துச் செல்கிறார்கள். அந்தக் கருவிகள் மற்றும் ஆயுதங்களில் பலவற்றில் இரும்பினால் நுனிகள் போடப்பட்டிருக்கும். சென்டினலிஸ் தீவுகளின் கரையோரத்தில் ஒதுங்கும் பொருட்களைக் கண்டுபிடித்து தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள்.

சென்டினலீஸ்கள் கூடைகளைப் பின்னுகின்றனர். மேலும் அவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட மர செதுக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். இது மனிதக் குல வரலாற்றில் கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.

இதுவரை, சென்டினீஸ் மொழி எதுவும் வெளியாட்களுக்குத் தெரியாது. வடக்கு சென்டினல் தீவுக்கு வெளியே உள்ள யாருக்கும் உண்மையில் சென்டினலிஸ்கள் தங்களுக்குள் எப்படி அழைத்துக் கொள்கிறார்கள் என்பதும் தெரியாது. அவர்களை எப்படி வாழ்த்துவது அல்லது உலகத்தைப் பற்றிய அவர்களின் பார்வை மற்றும் அவர்களின் பங்கு என்ன என்று யாருக்கும் தெரியாது.

சென்டினலிஸ் மக்கள் ஏன் பார்வையாளர்களை விரும்புவதில்லை?

1771 ஆம் ஆண்டு ஒரு இரவில், கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் ஒன்று சென்டினல் தீவைக் கடந்தது. அப்போது கரையில் மின்னொளிகள் மின்னுவதைக் கண்டது. ஆனால் கப்பல் ஒரு ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுப் பணியிலிருந்ததால் அத்தீவில் நிற்கவில்லை. ஹைட்ரோகிராஃபிக் சர்வே என்பது கடல்வழி வழி செலுத்தல், கடல் கட்டுமானம், அகழ்வாராய்ச்சி, கடல் எண்ணெய் ஆய்வு/கடற்கரை எண்ணெய் தோண்டுதல் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் ஆகும்.

சென்டினல் தீவு
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு

எனவே சென்டினலீஸ் மக்கள் ஒரு நூற்றாண்டுவரை வெளியுலக தொந்தரவு இல்லாமல் இருந்தார்கள். இதன் பிறகு நினிவே என்று அழைக்கப்படும் ஒரு இந்திய வணிகக் கப்பல் இத்தீவின் அருகே பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

கப்பலிலிருந்த 86 பயணிகளும் 20 பணியாளர்களும் கடலில் நீந்தி வடக்கு சென்டினலீஸ் கடற்கரைக்குச் சென்றனர். அவர்கள் தீவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். அப்போது சென்டினலீஸ் மக்கள் கரைக்கு வந்தவர்களை வில் அம்பு கொண்டு தாக்கினர். நினிவே கப்பலைச் சார்ந்தவர்களும் பதிலுக்குக் கற்கள், கம்புகளைக் கொண்டு தாக்கினர்.

மேலும் கப்பல் விபத்தில் தப்பியவர்களை மீட்பதற்காக ராயல் கடற்படை கப்பல் வரும் வரை இரு தரப்பினரும் மோதிக் கொண்டுதான் இருந்தனர். இதை ஒட்டிதான் ​​பிரிட்டீஷ் இந்தியாவின் காலனித்துவ பகுதியாக சென்டினல் தீவை அறிவிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

இது 1880 ஆம் ஆண்டில் மாரிஸ் விடல் போர்ட்மேன் என்ற இளம் ராயல் கடற்படை அதிகாரி அந்தமான் மற்றும் நிக்கோபாருக்குப் பொறுப்பேற்றார். போர்ட்மேன் தன்னை ஒரு மானுடவியலாளனாகக் கருதினார்.

சென்டினல் தீவு (வானிலிருந்து)
சென்டினல் தீவு (வானிலிருந்து)Twitter

மேலும் 1880 இல் அவர் வடக்கு சென்டினல் தீவில் கடற்படை அதிகாரிகள், அந்தமான் தீவில் உள்ள தண்டனைக் காலனியைச் சேர்ந்த குற்றவாளிகள் மற்றும் அந்தமானின் வழிகாட்டிகள் அடங்கிய ஒரு பெரிய குழுவுடன் தரையிறங்கினார்.

அப்போது அவர்கள் அவசரமாகக் கைவிடப்பட்ட கிராமங்களை மட்டுமே கண்டுபிடித்தனர். ஊடுருவல்காரர்கள் வருவதைக் கண்ட மக்கள், மேலும் உள்நாட்டில் மறைந்திருக்கும் இடங்களுக்குத் தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு வயதான தம்பதியினரும் நான்கு குழந்தைகளும் மட்டும் தப்பிச் செல்லும் முயற்சியில் தோல்வயுற்று தங்கியிருந்தனர்.போர்ட்மேனும் அவரது தேடுதல் குழுவினரும் அவர்களைப் பிடித்து, அந்தமான் காலனித்துவ தலைநகரான போர்ட் பிளேயருக்குக் கொண்டு சென்றனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட ஆறு சென்டினலீஸ் மக்களும் கடுமையாக நோய் வாய்ப்பட்டனர். மேலும் வயதான அந்த தம்பதியினர் போர்ட் பிளேயரில் இறந்தனர். நோய்வாய்ப்பட்ட நான்கு குழந்தைகளையும் மீண்டும் வடக்கு சென்டினல் கடற்கரையில் ஒரு சிறிய பரிசுப் பொருட்களுடன் இறக்கிவிடுவது நல்லது என்று போர்ட்மேன் முடிவு செய்தார். குழந்தைகள் தங்கள் நோயை மற்ற மக்களுக்குப் பரப்பினார்களா அல்லது அதன் தாக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பது தெரியவில்லை.

சென்டினல் தீவு
ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு

1896 ஆம் ஆண்டில், தப்பியோடிய ஒரு குற்றவாளி அந்தமான் தீவு தண்டனைக் காலனியிலிருந்து ஒரு தற்காலிக படகில் தப்பிச் செல்ல முயன்றார். அவர் வடக்கு சென்டினல் தீவில் கரை ஒதுங்கினார். ஒரு தேடுதல் குழுவினர் சில நாட்களுக்குப் பிறகு, அவரது தொண்டை வெட்டப்பட்ட நிலையில், அம்புக் காயங்கள் நிறைந்த அவரது உடலின் எச்சங்களைக் கண்டுபிடித்தனர்.

இதன் பிறகு ஆங்கிலேயர்கள் புத்திசாலித்தனமாக சென்டினலிஸ்களை அமைதியுடன் விட்டுவிட முடிவு செய்தனர்.

சென்டினலிஸ்டுகளோடு நட்பை உருவாக்குவது சாத்தியமா?

நினிவே சம்பவத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் திரினோக் நாத் பண்டிட் தலைமையிலான மானுடவியலாளர்கள் குழு வடக்கு சென்டினல் தீவில் தரையிறங்கியது. போர்ட்மேனைப் போலவே, அவர்களும் அவசரமாக கைவிடப்பட்ட குடிசைகளை மட்டுமே கண்டுபிடித்தனர். பண்டிட் மற்றும் அவரது குழுவினர் துணி, மிட்டாய் மற்றும் பிளாஸ்டிக் வாளிகள் முதலான பரிசுகளை விட்டுச் சென்றனர்.

சென்டினலீஸ் மக்கள்
சென்டினலீஸ் மக்கள்Twitter

இதற்கிடையில், 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து வடக்கு சென்டினல் தீவு சட்டப்பூர்வமாக ஒரு குழப்ப நிலையிலிருந்தது. 1970 இல், தனிமைப்படுத்தப்பட்ட இந்த சிறிய தீவுக்கு இந்தியா உரிமை கோரியது. மேலும் ஒரு கணக்கெடுப்பு கல் பலகையைக் கடற்கரையில் பதித்தது. இதற்கு சென்டினலிஸ் மக்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

பண்டிட்டும் அவரது சகாக்களும் சென்டினலிஸ்டுகளை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றனர். கடற்கரையில் தேங்காய் மற்றும் பிற பரிசுகளைக் கீழே இறக்கி, அவசரமாகப் பின்வாங்கினார். சென்டினலீஸ்கள் பரிசுப் பொருட்களிலிருந்த உயிருள்ள பன்றிகளைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஈட்டியை எறிந்து பின்னர் மணலில் பன்றிகளைப் புதைத்தனர். பிளாஸ்டிக் பொம்மைகளையும் அவ்வாறே புதைத்தனர். ஆனால் அவர்கள் உலோகப் பானைகள் மற்றும் சட்டிகளால் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றியது. மேலும் அவர்கள் தீவில் வளராத தேங்காய்களை மிகவும் விரும்பினர்.

இத்தகைய வெளியுலக வருகைகள் 1981 வரை அவ்வப்போது இருந்தன. 1974 இல் ஒரு நேஷனல் ஜியோகிராஃபிக் படக் குழுவினர் தீவுக்கு அருகே வந்தனர். குழுவின் இயக்குநர் தொடையில் சென்டினலிஸ்டுகளால் ஏவப்பட்ட அம்பு ஒன்று பாய்ந்தது. நாடுகடத்தப்பட்ட பெல்ஜியத்தின் மூன்றாம் லியோபோல்ட் மன்னன் 1975 இல் ஒரு படகு பயணத்தில் தீவுக்கு அருகில் சென்றார். மேலும் சென்டினலிஸ் அவரை அம்புகளால் எச்சரித்தனர்.

சென்டினல் தீவு
கடலுக்கு அடியில் வெடிக்கும் எரிமலை; அதிலும் உயிர் வாழும் சுறாக்கள் - என்ன நடக்கிறது?

1981 ஆம் ஆண்டில், ப்ரிம்ரோஸ் என்று அழைக்கப்படும் ஒரு சரக்குக் கப்பலின் 28 பேர் கொண்ட அவரது குழுவினர் தீவின் அருகே விபத்தினால் மாட்டிக் கொண்டனர். ஆனால் இந்த முறை மாலுமிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் தீவுக்கு வந்த பார்வையாளர்கள் சென்டினலீஸ்கள் தங்கள் கருவிகள் மற்றும் ஆயுதங்களுக்காகக் கப்பலிலிருந்து உலோகத்தைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள். அதே ஆண்டில், பண்டிட்டும் அவரது குழுவினரும் தங்கள் முயற்சிகளை முடுக்கி விட்டார்கள். மாதம் ஒரு முறை தீவில் இறங்கினர்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, பண்டிட் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு, அந்த ஒழுங்குமுறையும் விடாமுயற்சியும் பலனளித்தன. 1991 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு நாள், தீவு வாசிகள் குழு ஒன்று ஆயுதங்கள் ஏதுவுமின்றி, வெறும் நெய்யப்பட்ட கூடைகள் மற்றும் தேங்காய்களை வெட்டுவதற்குப் பயன்படுத்திய கருவிகளைப் பெறுவதற்காகக் கடற்கரைக்கு வந்தனர்.

அப்போது முன்னெப்போதையும் விட வெளியாட்களுடன் நெருங்கிப் பழகினார்கள். அந்த நாளின் பிற்பகுதியில், மானுடவியலாளர்கள் திரும்பி வந்தபோது, ​​கடற்கரையில் இரண்டு டஜன் சென்டினலிஸ் மக்கள் நிற்பதைக் கண்டனர்.

சென்டினல் தீவு
Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு

அப்போது ஒரு சுவாரஸ்யமான காட்சி அரங்கேறியது. வந்தவர்களைக் குறிவைக்க ஒரு ஆண் தன் வில்லை உயர்த்தினான். ஒரு பெண் வில்லை கீழே தள்ளினாள். அதற்கு அந்த மனிதன் வில்லையும் அம்பையும் கைவிட்டு மணலில் புதைத்தான். இது பேச்சுவார்த்தை அம்சமா அல்லது சடங்கு நிகழ்ச்சியா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஆயுதங்கள் அகற்றப்பட்டவுடன், மக்கள் தங்கள் தேங்காய்களைச் சேகரிக்கப் பார்வையாளர்களின் படகுகளுக்கு விரைந்தனர்.

ஆனால் சென்டினீஸ் விருந்தோம்பல் அதன் வரம்புகளைக் கொண்டிருந்தது. மற்றொரு விஜயத்தில், சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு சென்டினலிஸ் நபர், விருந்தினர்கள் வெளியேற வேண்டிய நேரம் இது என்று பண்பாட்டுக்குத் தனது கத்தியை உருவி, வெட்டும் சைகை செய்தார்.

"நாம் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல் அவர்களின் எல்லைக்குள் நுழைய முயன்றாலோ அல்லது வசதிக்காக மிக அருகில் சென்றாலோ, அவர்கள் நம்மைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் கடைசி முயற்சியாக அம்புகளை எய்வார்கள்" என்று பண்டிட், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.

சென்டினல் தீவு
நவ்ரூ : வளமான நாடு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை - இருண்ட வரலாறு

தீவு வாசிகளுக்கும் மானுடவியலாளர்களுக்கும் இடையிலான மெல்லிய நட்பு தேங்காய் கையூட்டுகளுக்கு அப்பால் நகரவில்லை. சென்டினலீஸ்கள் பதிலுக்குப் பரிசுகளை வழங்கவில்லை மற்றும் பார்வையாளர்களைத் தங்குவதற்கு அல்லது உள்நாட்டிற்கு அழைத்துச் செல்ல அழைக்கவில்லை. மேலும் இரு தரப்பிலும் உண்மையில் எப்படி மற்றவருடன் பேசுவது என்று கற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் இந்திய அரசாங்கம் 1996 இல் மானுடவியலாளர்களின் வருகையை நிறுத்தியது.

2004 சுனாமிக்குப் பிறகு இந்தியக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர்கள் தீவின் மீது பறந்தபோது, ​​சென்டினலீஸ்கள் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டார்கள். வில் மற்றும் அம்புகளால் ஹெலிகாப்டரைத் தாக்க சிறிதும் தயங்கவில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல், ஒரு இந்தியப் படகு கரையோரம் சென்றது. மேலும் சென்டினலீஸ் மக்கள் படகில் வந்த மீனவர்கள் இருவரையும் கொன்று அவர்களின் எச்சங்களைப் புதைத்தனர்.

இப்போது என்ன நடக்கிறது?

2018 ஆம் ஆண்டுசென்டினலீஸ் மக்கள் அமெரிக்கச் சுற்றுலாப் பயணி ஜான் ஆலன் சாவ் தங்கள் தீவில் காலடி எடுத்து வைத்து கடற்கரையில் நின்று பாடல்களைப் பாடியதை விரும்பவில்லை. அவர்கள் அவரை இரண்டு முறை விரட்டியடித்தனர். ஆனால் அவர் மூன்றாவது முறையாகக் கரைக்கு வந்தபோது, ​​​​அவர்கள் அவரைக் கொன்றதாக நம்பப்படுகிறது. 2006ல் இரண்டு இந்திய மீனவர்களுக்கு செய்ததைப் போலவே, அவரது உடலையும் புதைத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திய அரசாங்கம் இப்போது சௌவின் உடலைத் தேடுவதை நிறுத்தியுள்ளது.

சென்டினல்களால் கொல்லப்பட்ட அமெரிக்கர்
சென்டினல்களால் கொல்லப்பட்ட அமெரிக்கர்Twitter

இந்த சம்பவம் சென்டினலீஸ் போன்ற ஒப்பீட்டளவில் தொடர்பில்லாத குழுக்களுக்கான பாதுகாப்பு பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. மானுடவியலாளர் பண்டிட் அவர்களை விட்டுவிட வேண்டும் என்று வாதிட்டார். இப்போது ஓய்வு பெற்ற அந்த மானுடவியலாளரின் கூற்றுப்படி, சென்டினலிஸ் வெளியுலகோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் அவர்கள் தாங்களாகவே நன்றாக இருக்கிறார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்திய அதிகாரிகள் அவ்வப்போது மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகத் தீவுக்குத் தொடர்ந்து வருகிறார்கள். கடைசியாக 2011 இல் வந்தார்கள்.

சென்டினல் தீவு
'பழங்குடி மாணவர்களின் Master ' - 2 ரூபாய்க்கு டியூஷன் எடுக்கும் 78 வயது ஆசிரியர் சுஜீத்

இப்படியாக சென்டினலீஸ் பழங்குடி மக்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் வாழும் ஒரு குழுவினராக இருக்கின்றனர். உலகில் இப்படித் தனித்து வாழும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவு. மானுடவியலாளர்கள் நோக்கில் வடக்கு சென்டினல் தீவு மக்கள் முக்கியமானவர்கள். இவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் போது நாம் மனித குல வரலாறு எப்படி நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும். அதே நேரம் நாம் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதும் அவசியம்.

சென்டினல் தீவு
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com